குளுகுளு துத்தியிலை..மாதவிலக்கு முதல் உடல்சூடு வரை ஓட்டும் துத்திக்கீரை! பெண்கள் தவிர்க்கவே கூடாதாம்
சென்னை: பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் துத்திக்கீரையை பற்றி தெரியுமா? இதில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?
இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது.. எனவே, உடல் சூடு உள்ளவர்களுக்கு இது மருந்தாகிறது.. அதனால்தான், இந்த கீரையை, மூலநோய்க்கு மருந்தாக இன்றுவரை பயன்படுத்துகிறார்கள். மூல நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்துக்கு ஒருமுறை இந்த கீரையை அரைத்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தாலே, மூலநோய் கட்டுக்குள் வருமாம்.

குளுமை கீரை: சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், குடல் புண், வாய்ப்புண்கள், உடலிலுள்ள கட்டிகள், புண்கள், அத்தனை உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இந்த கீரை சரிசெய்கிறது. உடல் குளிர்ச்சி பெற பெரும்பாலும், பசும்பாலுடன் துத்திஇலையை பொடி செய்து சாப்பிடுவார்கள். உடலில் கட்டிகள் இருந்தாலும், இந்த குளுகுளு இலையை அரைத்து கட்டினால் நிவாரணம் கிடைக்கும்.
பெண்களுக்கு துத்திக்கீரை ஒரு அருமருந்தாகும்.. காரணம், கர்ப்பப்பை கோளாறுகளை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்யக்கூடிய தன்மை இந்த துத்திக்கீரைகளுக்கு உள்ளது..
மாதவிலக்கு: அதேபோல, மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிறு வலியை இந்த கீரை சரிசெய்துவிடும்.. அதிக உதிரப்போக்கும் இருந்தாலும், இந்த கீரையை சமைத்து சாப்பிடும்போது, அவை கட்டுக்குள் வரும்.
அல்லது சாறு போல பயன்படுத்தி கொள்ளலாம்.. அதாவது, ஒரு கைப்பிடி துத்தி இலையை சுத்தம் செய்து, நன்றாக அலசி, தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து எடுக்க வேண்டும். இதில், சுட்டு கரியாக்கிய வசம்பு கரியை சிறிது சேர்த்து வெறும் வயிற்றில் 3 நாள் குடித்து வந்தாலே மாதவிலக்கு வலி தீர்ந்தும். அதிக ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும்.
அதுமட்டுமல்ல, வெள்ளைப்படுதல் கோளாறுகளை இந்த கீரை சரிசெய்யும்.. எனவே, வெள்ளைப்படுதல் ஆரம்ப கட்டமாக இருந்தால், உடனே இந்த கீரையை சமையலில் பயன்படுத்தலாம்.
குறைபாடுகள்: அதேபோல, வாரத்துக்கு ஒருமுறையாவது, துத்திக்கீரையை பசும்நெய்யும் வதக்கி சமைத்து சாப்பிடும்போதும், வெள்ளைப்பாடு குறைபாடு மெல்ல குறைய துவங்கும்.. இந்த துத்தி இலையை சுத்தம் செய்து, கழுவி, நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.
அல்லது இந்த கீரையின் விதைகளையும் தூள் செய்து, வெந்நீரில் கலந்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.. அதேபோல, பாசிப்பருப்பு வேகவைத்து துத்தி இலைகளை சேர்த்து நெய் சேர்த்து வதக்கி சாதத்தில் கலந்து, 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடும்போதும் வெள்ளைப்படுதல் கட்டுக்குள் அடங்கும்.
கஷாயம்: துத்தி செடியின் இலைகள் மட்டுமல்ல, இந்த செடியின் பூ, காய், வேர் போன்ற பாகங்களை பறித்து, சுத்தம் செய்து, கஷாயம் போல காய்ச்சி குடித்து வந்தால், பெண்களுக்கு மிகவும் நல்லது. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று இந்த கீரையை பெண்கள் பயன்படுத்தலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications