பயத்தங்காய் சாப்பிடுவீங்களா.. கருகரு தலைமுடிக்கு "காராமணி".. அதிசய பயத்தங்காய் "இதயத்தின் நண்பன்"
சென்னை: பயத்தங்காய் சாப்பிட்டிருக்கீங்களா? இதை பற்றி தெரிந்து கொண்டால், நிச்சயம் உணவில் சேர்த்து கொள்வீர்கள்.. மிஸ் பண்ணவே மாட்டீங்க.
பயத்தங்காயை, சிலர் காராமணி என்று சொல்வார்கள்.. அவரை குடும்பத்தை சேர்ந்தது.. ஆனால், கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பீன்ஸ் போலவே இருக்கும்.. ஆனால், இன்னும் நீளமாக, மெலிதாக இருக்கும். உள்ளே காராமணி பருப்புகள் இருக்கும்.
காராமணி: இது மருத்துவத்தன்மை வாய்ந்தது.. பயத்தங்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.. நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இந்த காயை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.. பக்கவாதம், இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும். ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளதால், புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.
இதிலுள்ள வைட்டமின் சி- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.. முக்கியமாக நீர்த்தன்மை நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
கல்லீரல் பிரச்சனை: அதுமட்டுமல்ல, உடல் எடையை குறைக்க முக்கியமாக தேவைப்படுவதே நார்ச்சத்துதான்.. அது இந்த காராமணியில் நிறையவே உள்ளது.. பயத்தங்காயை அடிக்கடி சாப்பிடுவதால், கல்லீரல் பிரச்சனையை அண்ட விடாமல் தடுக்கிறது. இதனால், மஞ்சள் காமாலை நோய்கள் ஏற்படாமலும் தடுக்கப்படுகிறது.
இந்த காராமணி நம்முடைய சருமத்தை காக்க கூடியது.. அழகு தரக்கூடியது.. முதுமை தோற்றத்தை தடுக்கக்கூடியது.. தோற்ற பொலிவு தரக்கூடியது.. பாசிபருப்பு எப்படி நம்முடைய சருமத்துக்கு உதவுகிறதோ, இதுவும் அதேபோல உதவுகிறது.
கர்ப்பிணிகள்: கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த காராமணியை சாப்பிடலாம்.. அதிக அளவில் ஃபோலேட் சத்து இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவக்கூடியது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த காராமணியை சாப்பிடலாம்.. அதிக அளவில் ஃபோலேட் சத்து இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவக்கூடியது.
பெண்களுக்கு முடி அடர்த்தியாக வளரும்.. ஆண் - பெண் இருவருக்குமே முடி வளர்ச்சிக்கு இது உதவக்கூடியது.. செரிமானத்தை அதிகரிக்கும்.. பொடியாக நறுக்கி பொரியல் செய்து சாப்பிடலாம்.. வாரத்தில் 2 நாட்களாவது இந்த பயிரை சாப்பிடுவது ஆயுளை பெருக்கும்.. வாரம் ஒருமுறையாவது இந்த காராமணியை உணவில் எடுத்து கொள்வது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications