கோதுமை மாவு, அரிசி மாவில் வண்டு, புழு வைத்துவிடுகிறதா? ஒரு வருஷமானாலும் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
சென்னை: அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு, சோள மாவு ஆகியவற்றில் வண்டு, புழு வைத்துவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்தவே முடியாது. அப்படி இல்லாமல் அந்த மாவு எப்போதும் ஃபிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கோதுமை மாவு, அரிசி மாவு, உள்ளிட்டவைகளை மக்கள் அரைத்துக் கொள்கிறார்கள். அதாவது கோதுமை, அரிசியை சுத்தம் செய்து காய வைத்து மாவு மில்லில் கொடுத்தால் அரைத்து கொடுத்துவிடுகிறார்கள்.

ஒரு சிலர் இட்லி, தோசைக்கு அவ்வப்போது மாவு அரைக்க வேண்டியிருக்கிறதே என்பதற்காக அரிசி, வெந்தயம், உளுந்தை கழுவி காயவைத்து அரைத்து தேவையான நேரத்தில் அதில் தண்ணீர் கலந்து புளிக்க வைத்து பிறகு சமையலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அது போல் கேழ்வரகு மாவு, ஓட்ஸ் மாவு உள்ளிட்டவைகளையும் அரைத்து வைத்துக் கொள்கிறார்கள். அது போல் முறுக்கு பிழியும் மாவையும் அரைத்து வைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பொதுவாக இவ்வாறு அரைக்கும் போதும் வெள்ளை மாவுகளில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதால் அவை நீண்ட நாட்கள் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்கும். ஆனால் முழுக் கோதுமை மாவு, பசையம் இல்லாத மாவுகள் குறைந்த நாளே கெடாமல் இருக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன.
மாவில் வண்டு வைத்துவிட்டால் அதை சிலர் சலித்து பயன்படுத்துவார்கள். ஆனாலும் அதில் பூச்சி வாடை அடிக்கும் என்பதால் சிலர் அப்படியே தூக்கி கொட்டிவிடுவார்கள். ஈரம் இல்லாமல் அரைத்து வைக்கப்படும் உலர்ந்த மாவு பொருள் எப்படி கெட்டு போகும் என்பதே பலருக்கு ஆச்சரியம் அளிக்கும்.
மாவு கெட்டு போவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
மாவின் மேல் காற்று படுவது, எனவே காற்று படாமல் இறுக்கமான மூடி கொண்ட பாத்திரங்களில் மாவை போட்டு வைக்க வேண்டும். மூடி இறுக்கமாக இருந்தால் பூச்சிகள் நுழையாது. மாவு காற்றில் படும்போது அதில் ஆக்சிடேஷன் நடக்கும். இதனால் மாவு கெட்டு போகும்.
அது போல் மாவுகளை அவ்வப்போது வெயிலில் காய வைத்து டப்பாவில் கொட்டி வைக்க வேண்டும். ஈரப்பதத்துடன் வைத்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும்.
மாவில் பூச்சிகள் இருந்தால் அதை பயன்படுத்தவே பிடிக்காது. அதை பயன்படுத்துவதும் பாதுகாப்பானதல்ல. ஏனென்றால் பூச்சிகள் எச்சங்கள் அதில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாவு வைத்திருக்கும் பாத்திரங்களில் பிரிஞ்சி இலை, கிராம்பு போட்டு வைக்கலாம். இவை இருந்தால் பூச்சிகள் வராது.
அது போல் மாவு கெடாமல் இருக்க அதை நாம் எப்படி பத்திரப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். மாவை அறையின் சாதாரண வெப்பநிலையில் 6 முதல் 8 மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைத்தால் ஒரு ஆண்டு வைத்தாலும் ஒன்றும் ஆகாது. ப்ரீசரில் வைத்தால் 2 ஆண்டுகள் வரை மாவை பாதுகாக்கலாம்.
எப்போதும் மாவுகளை குளிர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி மாவை பயன்படுத்தாவிட்டால் ப்ரீசரில் வைக்கலாம், காற்று, ஈரம் புகாத பாத்திரங்களில் வைக்க வேண்டும். இதனால் அதன் தரம் கூட குறையாமல் 2 ஆண்டுகள் வரை அப்படியே நீடிக்கும்.
மாவுகளை இருப்பு வைக்கும் போது, பழைய மாவில் மேலும் மேலும் புதியதை கொட்டிக் கொண்டே வரக் கூடாது. பழைய மாவை காலி செய்துவிட்டோ அல்லது வேறு பாத்திரத்தில் கொட்டி வைத்தோ பயன்படுத்த வேண்டும். அது போல் மாவு வைக்கும் பாத்திரங்களில் ஈரத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும்.
மாவில் பூச்சி, வாசனையின்மை, நிறமாற்றம் என்றால் அந்த மாவை பயன்படுத்தாதீர்கள். பிரிட்ஜ், ப்ரீசரில் வைத்தாலும் மாவை பயன்படுத்தும் முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக சலித்துக் கொள்ளவும்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications