ரேஷன் அரிசியில் இட்லி புசு புசுனு சாஃப்ட்டா வரணுமா? ஈஸி டிப்ஸ்! மெஷர்மென்ட்தான் முக்கியம்!
சென்னை: காசு கொடுத்து வாங்கும் அரிசியில் மட்டும்தான் இட்லி பஞ்சு பஞ்சாக வரும் என நீங்கள் நினைத்தால் தவறு. ரேஷன் கடைகளில் வாங்கும் இலவச அரிசியிலும் சூப்பராக இட்லிகளை தயாரிக்கலாம். என்ன ஒன்று அளவுதான் முக்கியம்! அது தெரிந்தால் போதும்!
தென்னிந்தியாவில் பெரும்பாலானோருக்கு பிடித்தமான உணவு- இட்லிதான். இதுதான் எளிதில் ஜீரணமாகும் என்பதால் இதை விரும்பி உண்கிறார்கள். இந்த இட்லிக்கு சட்னி, சாம்பார், இட்லி பொடி உள்ளிட்டவைகளை தொட்டு சாப்பிடலாம்.

குழந்தை பிறந்தவர்கள், நோய் வாய்பட்டவர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புபவர்கள், 3 வயது்குள்பட்ட குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு இட்லிதான் ஜீரணத்தை கொடுக்கும் நல்ல உணவு.
இப்படிப்பட்ட இட்லி இன்று பல விதமாக தயார் செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் இட்லி, பொடி இட்லி, மினி இட்லி, வெஜிடபிள் இட்லி, ஸ்டஃப்டு இட்லி என நிறைய இருக்கின்றன. என்னதான் இட்லி எல்லோருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும் அது கல் போல் இருந்தால் யாருக்கும் பிடிக்காது. மெத்து மெத்தென பஞ்சு போல் இருக்க வேண்டும்.
இந்த இட்லிக்கு மாவை அரைக்க காசு கொடுத்து நிறைய பேர் அரிசி வாங்குகிறார்கள். அந்த அரிசியை பயன்படுத்தினால்தான் பஞ்சு போல் இட்லி வரும் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் ரேஷன் அரிசியில் கூட பஞ்சு போல் இட்லி செய்யலாம். அதுவும் கிரைண்டரில் அரைக்காமல் மிக்ஸியிலேயே அரைக்கலாம்.
இது எப்படி என்பதை பார்ப்போம். நான்கு பங்கு ரேஷன் புழுங்கல் அரிசியை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அது போல் ஒரு பங்கு பச்சரிசியை எடுத்து கொள்ளலாம். இவற்றை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதற்கு ஒன்னேகால் பங்கு முழு வெள்ளை உருட்டு உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து தண்ணீரில் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு பிரிட்ஜில் உளுந்தை வைத்துவிடுங்கள். முதலில் அரிசியை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு பிரிட்ஜில் இருந்து எடுத்த உளுந்தை ஜாரில் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து தெளித்து பந்து போல் வெண்ணெய் போல் வரும் வரை அரைக்க வேண்டும். உளுந்தை அரைக்கும் போது மிக்ஸி சூடு ஆவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஐஸ் கட்டிகளை போட்டு அரைக்க வேண்டும்.
பின்னர் மாவில் உப்பு போட்டு கலந்து விடவும். இரவு முழுவதும் புளிக்க விட்டு காலையில் அப்படியே இட்லி ஊற்றி பாருங்கள். இட்லி புசு புசுவென இருக்கு. கல்லு போல் இருக்காது. இதே முறையில் டிரை செய்து அரிசி வாங்கும் காசை மிச்சப்படுத்துங்கள்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications