Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னாபின்னானு சர்க்கரை நோய் இருக்கா? சீதா பழம் இலை இருக்கே! கசாயம் குடிச்சி பாருங்க! மேஜிக்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொய்யா இலைகளை போல் வேப்பிலை மற்றும் சீதாப்பழத்தின் இலைகளையும் கசாயம் வைத்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

அந்த காலகட்டத்தில் சர்க்கரை நோயெல்லாம் 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும் என்பார்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வருகிறது. கர்ப்பத்தில் இருக்கும் தாய்க்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வந்தால் அது சில சமயங்களில் குழந்தையையும் பாதிக்கிறது.

If you have diabetes then use these 3 leaves docoction

அந்த நிலையில் குழந்தைகள் பலருக்கு சர்க்கரை நோய் இருப்பதும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதும் நாம் தெரிந்த விஷயமே ஆகும். இந்த நிலையில் சர்க்கரை நோய் என்பது காலத்திற்கு மருந்து மாத்திரை சாப்பிடும் நோய் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் கூறும் போது உடற்பயிற்சி, சரியான வாழ்வியல் முறை, மருந்து மாத்திரைகள், மன அழுத்தம் இல்லாமல் இருத்தல் இருந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். எந்த பிரச்சினையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார்கள். சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாவிட்டால் இதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்டவை ஏற்படும்.

இந்த நிலையில் சர்க்கரை நோயை குறைக்க என்ன செய்யலாம் என பலர் இணையத்தில் தேடுவதுண்டு. அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் இலைகளில் உள்ள துவர்ப்பு தன்மை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

இந்த இலைகளை பறித்து வந்து கழுவி அதை துண்டு துண்டாக நறுக்கி 4 டம்ளர் நீர் ஊற்றி, அது கொதித்தவுடன் இந்த நறுக்கி வைத்த இலைகளை போட்டு அந்த தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை வைத்து வடிகட்டி குடிக்கலாம். இப்படி தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலனை அளிக்கும்.

அது போல் வேப்பிலையை எடுக்கலாம். துளிர் இலைகளை பறித்து அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால் கசாயம் வைத்தும் சாப்பிடலாம். இது சர்க்கரை நோயை மட்டும் விரட்டாமல் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது.

அது போல் சீதாப்பழத்தின் இலைகளையும் வைத்து கசாயம் செய்யலாம், அதன் இலைகளை கழுவி பின்னர் சூடான நீரில் போட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி குடிக்கலாம். இப்படி ஒரு நாளைக்கு ஒன்று என தினந்தோறும் குடித்து வந்தார் அப்புறம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+