தூங்கும் முன்பு இதை குடிச்சிட்டு படுங்க..ஒரே ஆச்சரியம்.. இரவில் நிம்மதி தூக்கத்திற்கு சூப்பர் டிப்ஸ்
சென்னை: ஒவ்வொரு நாள் முடிவிலும், ஆரோக்கியமான இரவு அவசியமாகிறது.. உணவு மற்றும் பழக்கவழக்கங்களை முறையாக கடைப்பிடித்தாலே, ஆரோக்கியமான வாழ்வு அமைநதுவிடுகிறது. அந்தவகையில், இரவு நேரங்களில் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது தெரியுமா?
நிம்மதியான தூக்கற்கு மன அழுத்தத்திலிருந்தும், மன சோர்விலிருந்தும் விடுவித்து கொள்ள வேண்டியிருக்கிறது.. தியானம், மூச்சு பயிற்சி செய்யலாம்.. பிடித்த புத்தகங்களை படிக்கலாம்.. இனிமையான பாட்டு கேட்லாம்..

மன அழுத்தம்: அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசிக்கொண்டிருக்கலாம். இப்படி மனதுக்கு பிடித்ததை செய்யும்போது, மன அழுத்தம் நீங்கி, தூக்கத்தை வரவழைக்க உதவும்.
தூங்க செல்வதற்கு முன்பே கண்களுக்கு ஓய்வு தர வேண்டியிருக்கிறது.. எனவே, தூங்கும்முன்பு, கம்ப்யூட்டர், டிவி, செல்வோன், டேப்லெட் இப்படி எல்லாவிதமான எலக்ட்ரானிக் பொருட்களையும் பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும்.. காரணம் இதிலிருந்து வெளியாகும், "நீல ஒளி8" மூளையை களைப்படைய வைத்துவிடும்.. அத்துடன், ஓய்வுக்கும் இட்டுச்செல்லாது. இதனால், இரவு தூக்கம் தடைபடுகிறது.
நிம்மதியான தூக்கம்: இரவு தூங்க போவதற்கு முன்பு, கால் பாதங்களில், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மசாஜ் செய்தால், நல்லதொரு தூக்கத்தை உங்களுக்கு கொடுக்கும்.
தூங்க போகும்முன்பு வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது.. காரணம், இந்த வெள்ளரிக்காயில் கக்கூர்பிட்டாசின் நிரம்பியிருப்பதால், அஜீரணத்தை தந்துவிடும்.. இதனால் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியாது.
காபி: அதேபோல, தூங்கும்போது காபி குடிக்கக்கூடாது.. காஃபின் நிறைந்த பானங்கள், தூக்கத்தை வரவழைப்பதற்கு பதிலாக, விழித்திருக்க வைத்துவிடுமாம். அதுவும், குறைந்தது 6 மணி நேரமாவது தூக்கத்தை தடுத்துவிடும் சக்தி இந்த காஃபினுக்கு இருக்கிறதாம். இந்த லிஸ்ட்டில் சாக்லேட்டையும் சேர்த்து கொள்ளலாம்.. காரணம் இதிலும் காஃபினும் உள்ளது.. உலர் பழங்களையும் சாப்படக்கூடாது.. இவையெல்லாம் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால், தூக்கத்தை கெடுத்துவிடும்..
அப்படியானால் இரவில் தூங்கும் முன் என்ன சாப்பிடலாம்? சோம்பு தண்னீர் அல்லது சோம்பு டீ தயாரித்து குடிக்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.. உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டதாம் இந்த சோம்பு தண்ணீர்.
கொழுப்பு: வயிற்றை சுற்றியிருக்கும் தேவையற்ற சதைகளை கரைக்கவும், தொப்பையை கரைக்கவும், யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தவும், சோம்பு தண்ணீர் மிக முக்கியமானது. அதுமட்டுமல்ல, மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை இந்த சோம்பு தண்ணீர் தந்துவிடுமாம்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications