Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயோ! யாரு இந்த நடிகை இவங்கள அடையாளமே தெரியலையே.. இத்தனை மோசமானதா ஒற்றைத் தலைவலி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகையும் பாஜக நிர்வாகியுமான மாளவிகா அவினாஷுக்கு என்ன ஆயிற்று? அவரது முகம் ஏன் இப்படி காணப்படுகிறது என்கிற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

நடிகை மாளவிகா அவினாஷை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. நீண்ட திலகம், எப்போதும் புன்சிரிப்பு.. நடனமாடும் கண்கள் இவைதான் இவரது அடையாளம். இவர் மாதவன் நடித்த ஜே ஜே படத்தில் கதாநாயகியின் சகோதரியாக நடித்து பிரபலமடைந்தார். இதையடுத்து அவர் பைரவா, கைதி, கேஜிஎப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

What happened to Actress Malavika Avinash?

கன்னடம் மற்றும் தமிழில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் கால் பதித்துள்ளார். இவர் பாஜகவில் 2013 ஆம் ஆண்டு இணைந்தார். அப்போது முதல் கர்நாடகா பாஜகவின் வளர்ச்சிக்காக அவர் செயல்பட்டு வருகிறார். இவர் சின்னத்திரை தொடர்களான அண்ணி, சிதம்பர ரகசியம், ராஜராஜேஸ்வரி, அரசி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது காற்றுக்கென்ன வேலி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி: இந்த நிலையில் நடிகை மாளவிகா அவினாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் முகம் வீங்கி யாரோ போல் மாளவிகா காட்சி அளிக்கிறார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: யாருக்கேனும் ஒற்றை தலைவலி பிரச்சினை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டீர்களேயானால் என்னை போல் மருத்துவமனையில் சேர்ந்து விடுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

What happened to Actress Malavika Avinash?

புகைப்படம்: இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இவர் விரைவில் உடல்நலம் தேறி வர வேண்டும் என வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஒற்றைத் தலைவலி என்றால் என்ன என்பதை பார்ப்போம். உலகில் 7 பேரில் ஒருவருக்கு இந்த மைக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலி பிரச்சினை இருந்து வருகிறது.

ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்: இந்த பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. இந்த தலைவலியானது ஒரு நரம்பியல் பிரச்சினையாகும். இதில் அதிகமான தலைவலி ஏற்படக் கூடும். 4 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட இந்த தலைவலி நீடிக்கும். வானிலை மாற்றங்கள், மன அழுத்தம் பயணம் உள்ளிட்டவை இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட காரணமாக சொல்லப்படுகின்றன.

மாதவிடாய் காலம்: மாதவிடாய் காலத்திலும் இந்த ஒற்றைத் தலைவலி சிலருக்கு ஏற்படுகிறது. ஆனால் அவர்களுக்கு மெனோபாஸ் வயதை எட்டும் போது இந்த தலைவலி குறைகிறது என்கிறார்கள். ஆனால் சிலருக்கு மெனோபாஸ் முடிந்த பிறகும் இந்த தலைவலி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்டவைகளை செய்தால் பலனளிப்பதாக சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+