உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்வோர் கவனத்திற்கு.. இளநீர் குடிக்கக் கூடாதாம்.. ஏன் தெரியுமா?
சென்னை: வெயிலுக்கு இதமாக இளநீர் குடிப்பது உடலுக்குப் புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று சொல்லப்பட்டாலும், அது அனைவருக்கும் ஏற்றதல்ல என்று தெரிய வந்துள்ளது. இளநீரைப் பருகுவது சில தரப்பினருக்கு நன்மையை விட அதிகளவில் சிக்கலைக் கொடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அதுகுறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் என்னதான் வடகிழக்கு பருவமழை நெருங்கினாலும், வெயில் மட்டும் குறைந்தபாடில்லை. இதனால் பொதுமக்கள் பலரும் வெயிலுக்கு இதமாக இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இளநீர் தாகத்தைப் போக்கி புத்துணர்ச்சியை அளிப்பதோடு, ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். குறிப்பாக உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஆனால் இளநீர் அனைத்து தரப்பினருக்குமானது அல்ல என்று தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு நன்மையை விடத் தீமையையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சிறுநீரக பிரச்சனைகள் இருப்போர் இளநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இளநீரில் அதிகளவிலான பொட்டாசியம் இருக்கிறது.
இதனால் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் தங்களது உடலில் இருந்து பொட்டாசியத்தை வெளியேற்ற சிரமங்களைச் சந்திக்க நேரிடும். அதிகளவிலான பொட்டாசியம் உடலில் கலந்தால், அது இதயத்துடிப்பைப் பாதிக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பி லோ - கலோரி டயட் இருப்பவர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இளநீரில் 45 முதல் 60 கலோரிகள் வரை இருந்தாலும், அது உடல் எடையை அதிகரிக்க கூடியதாகும். இதனால் இளநீர் அருந்துவதற்குப் பதிலாக, இந்த தரப்பினர் சாதாரண தண்ணீரையே குடிப்பதே நல்லது.
அதேபோல் தொடர்ச்சியாக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் நபர்கள் இளநீர் அருந்துவதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் சில மருந்துகள் உட்கொண்ட பின், அது உடலில் செயல்படுவதை இளநீர் தடுக்கக் கூடும். அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால், அந்த மருந்துகளின் செயல்பாட்டுக்கு சில சிக்கல் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, உடல் அலர்ஜி ஏற்படும் நபர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்ட பின், உடலுக்கு பொட்டாசியத்தை விடவும் சோடியம் தான் முக்கியமான எலக்ட்ரோலைட்டாகும். இளநீரில் குறைந்த அளவிலான சோடியம் மட்டுமே உள்ளது. அதிகளவில் பொட்டாசியம் தான் இருக்கிறது.
இளநீருக்கு பதிலாக ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளியில் அதிக சோடியம் உள்ளது. இதனால் அடுத்த முறை இளநீர் குடிப்பதற்கு முன்பாக இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாகக் காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின் இளநீர் பருகும் நபர்கள், இனி மாற்று பழவகைகளைச் சாப்பிடுவது அவர்களின் உடல்நலத்திற்குப் பயனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications