மீண்டும் மிரட்டும் மங்கிபாக்ஸ்.. சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்தது WHO
வாஷிங்டன்: மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளதால், சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த அறிவிப்பை ஹூ வெளியிட்டுள்ளது. மங்கி பாக்ஸ் தொற்று எப்படி பரவும், அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
மங்கி பாக்ஸ் (குரங்கம்மை) என்பது கொரோனா பெருந்தொற்று போல புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை. அது ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக எண்டமிக் நோயாகவே இருந்து வந்தது. ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த பாதிப்பு அதிகம் காணப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது, 2022-ல் குரங்கம்மை நோய் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து, சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த நோய் பரவல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து நோய் பரவலின் தீவிரம் குறைந்தது.
இந்த நிலையில், குரங்கம்மை நோயை மீண்டும் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளில் 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கோவில் இருந்து அண்டை நாடுகளுக்கும் இந்த குரங்கம்மை தொற்று பரவியதால் உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரங்கம்மை தொற்று எளிதாக பரவக் கூடியது.
சுகாதார அவசர நிலையாக மங்கி பாக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். பொதுவாக மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில் அம்மை பாதிப்பில் ஏற்படுவதைப் போலக் கொப்புளங்கள் ஏற்படும். இது தான் மங்கி பாக்ஸின் முக்கிய அறிகுறியாகும். மேலும், காய்ச்சல், தசைவலி, சளி ஆகியவையும் ஏற்படும்.
இது கொரோனாவை போல காற்றில் பரவக் கூடியது இல்லை. மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடன் நீண்ட நேரம் நேருக்கு நேரடி தொடர்பில் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். மேலும், குரங்கம்மையால் நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் நீர்த் துளிகள் மூலம் வைரஸ் பாதிப்பு பரவும்.
மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குக் குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் தற்போது வரை இல்லை. நோயாளிகள் மருத்துவமனையில் தனிமையில் இருக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மங்கி பாக்ஸ் பாதிப்பு பொதுவாக 15 நாட்களில் குணமடைந்துவிடும்.

காங்கோவில் இருந்து புருண்டி, கென்யா, ரவாண்டா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கும் மங்கி பாக்ஸ் பரவியுள்ள நிலையில், தற்போது உலக சுகாதார மையம் சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து நோய்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உயிர்களை காப்பாற்றுவது அவசியம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications