மீண்டும் மிரட்டும் மங்கிபாக்ஸ்.. சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்தது WHO
வாஷிங்டன்: மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளதால், சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த அறிவிப்பை ஹூ வெளியிட்டுள்ளது. மங்கி பாக்ஸ் தொற்று எப்படி பரவும், அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
மங்கி பாக்ஸ் (குரங்கம்மை) என்பது கொரோனா பெருந்தொற்று போல புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை. அது ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக எண்டமிக் நோயாகவே இருந்து வந்தது. ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த பாதிப்பு அதிகம் காணப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது, 2022-ல் குரங்கம்மை நோய் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து, சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த நோய் பரவல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து நோய் பரவலின் தீவிரம் குறைந்தது.
இந்த நிலையில், குரங்கம்மை நோயை மீண்டும் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளில் 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கோவில் இருந்து அண்டை நாடுகளுக்கும் இந்த குரங்கம்மை தொற்று பரவியதால் உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரங்கம்மை தொற்று எளிதாக பரவக் கூடியது.
சுகாதார அவசர நிலையாக மங்கி பாக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். பொதுவாக மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில் அம்மை பாதிப்பில் ஏற்படுவதைப் போலக் கொப்புளங்கள் ஏற்படும். இது தான் மங்கி பாக்ஸின் முக்கிய அறிகுறியாகும். மேலும், காய்ச்சல், தசைவலி, சளி ஆகியவையும் ஏற்படும்.
இது கொரோனாவை போல காற்றில் பரவக் கூடியது இல்லை. மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடன் நீண்ட நேரம் நேருக்கு நேரடி தொடர்பில் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். மேலும், குரங்கம்மையால் நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் நீர்த் துளிகள் மூலம் வைரஸ் பாதிப்பு பரவும்.
மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குக் குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் தற்போது வரை இல்லை. நோயாளிகள் மருத்துவமனையில் தனிமையில் இருக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மங்கி பாக்ஸ் பாதிப்பு பொதுவாக 15 நாட்களில் குணமடைந்துவிடும்.

காங்கோவில் இருந்து புருண்டி, கென்யா, ரவாண்டா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கும் மங்கி பாக்ஸ் பரவியுள்ள நிலையில், தற்போது உலக சுகாதார மையம் சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து நோய்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உயிர்களை காப்பாற்றுவது அவசியம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications