வந்தாச்சு! சூப்பர் அறிவிப்பு.. நீங்களும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆகலாம்.. எப்போது விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது இளைஞர்களுக்கு பலரும் பெரும் கனவாக உள்ளது. வருடக்கணக்கில் இந்த தேர்வுக்காக படிப்பதோடு, காலையிலே மைதானங்களில் உடல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை காண முடியும்.

காவல்துறையில் பணியிடங்களை பொறுத்தவரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி தமிழக காவல்துறை பணியிடங்களில் உள்ள காவலர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இடங்களை நிரப்பி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 30- ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எழுத்து தேர்வானது வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த சீருடை பணியாளர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் உள்ள காலிப்பணியிடங்களில் 20 சதவீதம் போலீஸ்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட்டு இருக்கிறது
காலிப்பணியிட விவரங்கள்:
- காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) - 366 பணியிடங்கள்
- சப் இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படை) - 145
- காவல் துணை கண்காணிப்பாளர்கள் ( TSP) - 110
கல்வித்தகுதி: பல்கலைக்கழக மானியக்குழு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 30 - க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் நிலைதேர்வுகள் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் உள்ளிட்டவைகளை கொண்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வுக்கட்டணம்: விண்ணப்பதாரர் தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்த தேர்வு தொடர்பான மேலும் தகவலை https://www.tnusrb.tn.gov.in/என்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையத்தளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் .
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications