ஏர் இந்தியா நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு டெல்லியில் நேர்முகத்தேர்வு!
சென்னை: ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள விமான பணியாளர் பணியிடங்கள் 5 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
ஆண்கள்: 31
பெண்கள்: 30
வயதுவரம்பு: 01.12.2014 தேதியின்படி 20 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்து ஏதாவதொரு விமான நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.01.2015, 05.01.2015 இரு நாட்களும் நடைபெறும். அன்றைய தினம் காலை 9.30 மணிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: டெல்லி
சம்பள விகிதம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய் 10000 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குபின் 5 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அதன்பிறகு மாதம் ரூபாய் 35,000 வழங்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே "கிளிக்" செய்யவும்.
இதுபோன்ற, மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.