பெல் நிறுவனத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்.. 232 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 232 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம். நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 236 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூர், காசியாபாத் புனே, தெலுங்கானா, சென்னை, மசிலிபட்டினம், பஞ்சகுலா, கோட்வரா மற்றும் நவி மும்பை ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்படும் விண்னப்பதாரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். பெல் நிறுவனத்தின் அறிவிப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

பணி விவரம்: பிராபேஷனரி என்ஜினீயர் (Electronics and Communication) -124 பணியிடங்கள்.
பிராபேஷனரரி என்ஜீனியர் (மெக்கானிக்கல்) -18 பணியிடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் -18 இடங்களும், மனித வள மேம்பாடு -12 பணியிடங்களும், அக்கவுண்ட்ஸ் ஆபிசர் (பைனான்ஸ்) -15 பணியிடங்களும் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து என்ஜினீயரிங் படித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த படிப்புகள் கேட்கப்பட்டுள்ளன. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல்1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். கணிணி வழி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் போதுமான கல்வி தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/84142/Index.html என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரகளுக்கான பயிற்சி காலம் உள்ளிட்ட நிபந்தனைகளை தேர்வு அறிவிப்பில் கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 28.10.2023 ஆகும். தேர்வு குறித்த அறிவிப்பை தெரிந்து கொள்ள https://bel-india.in/Documentviews.aspx?fileName=BEL%20Web%20Ad%20English-03-09-23.pdf கிளிக் செய்யவும்.
-
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications