டிகிரி மட்டும் போதும்.. மத்திய ஆயுதப்படை பிரிவில் ஏராளமான வாய்ப்பு.. பெண்களும் விண்ணப்பிக்கலாம்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் பிரிவில் காலியாக உள்ள ஏராளமான அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), மத்திய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்), இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் (ஐடிபிபி), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன.

இதில் தற்போது பிஎஸ்எப் பிரிவில் 86 பேர், சிஆர்பிஎப்புக்கு 55 பேர் சிஐஎஸ்எப்க்கு 91 பேர், ஐடிபிபி பிரிவுக்கு 60 பேர், எஸ்எஸ்பி பிரிவுக்கு 30 பேர் என மொத்தம் 322 பேர் அசிஸ்டென்ட் கமாண்டட் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வை யூபிஎஸ்சி மேற்கொள்ள உள்ளது.
இந்த பணிக்கு ஆண்களோடு சேர்ந்து பெண்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 20 வயதும், அதிகபட்சமாக 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 2023 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மேலும் விண்ணப்பத்தாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.upsconline.nic.in இணையதளம் மூலம் மே மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு, உடல் திறனறி தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி, திறமையை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications