ரெடியா? கைநிறைய சம்பளம்.. சென்னை ஐஐடியில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ
சென்னை: சென்னை ஐஐடியில் ஜுனியர் அசிஸ்டென்ட் உள்பட 10 பிரிவுகளில் காலியாக உள்ள 64 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முதல் டிகிரி, மாஸ்டர் டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கைநிறைய சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையிலும் ஐஐடி இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: சென்னை ஐஐடியில் தலைமை செக்யூரிட்டி ஆபிசர் (Chief Security Officer) பணிக்கு ஒருவர், அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் (Assistant Registrar) பணிக்கு 2 பேர், ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிக்கு ஒருவர், ஜுனியர் சூப்பிரண்டு பணிக்கு 9 பேர், அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு 4 பேர், பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஜுனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 30 பேர், சமையல் பணிக்கு 2 பேர், டிரைவர் பணிக்கு பணிக்கு 2 பேர், காவலாளி பணிக்கு 10 பேர் என மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: தலைமை செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு 50 வயதுக்குள்ளும்,அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிகளுக்கு 45 வயதுக்குள்ளும், ஜுனியர் சூப்பிரண்டு, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர்,பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிகளுக்கு 32 வயதுக்குள்ளும், ஜுனியர் அசிஸ்டென்ட், சமையல் பணி, டிரைவர், காவலாளி பணிகளுக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வும் வழங்கப்படும்.
கல்வி தகுதி: தலைமை செக்யூரிட்டி ஆபிசர், அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் பணிக்கு மாஸ்டர் டிகிரி, ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிக்கு டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஜுனியர் சூப்பிரண்டு, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு டிகிரி, பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிக்கு பிபிஎட் முடித்திருக்க வேண்டும். ஜுனியர் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி, சமையல் பணிக்கு டிப்ளமோ/பிஎஸ்டி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி, டிரைவர் பணிக்கு 12ம் வகுப்பு, காவலாளி பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: தலைமை செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு மாதம் Paymatrix லெவல் 12, அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிக்கு லெவல் - 10, ஜுனியர் சூப்பிரண்டு, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர்,பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிக்கு லெவல்-6, ஜுனியர் அசிஸ்டென்ட், சமையல் பணி, டிரைவர் பணிக்கு லெவல்-3, காவலாளி பணிக்கு லெவல்- 1 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் iitm.ac.in இணையதளம் மூலம் வரும் 12ம் தேதி முதல் மார்ச் மாதம் 12ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, டிரேட் தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications