குழந்தைகளை பார்த்துக்க பிடிக்குமா? உங்களுக்காகவே மதுரையில் வேலை ரெடி!
மதுரை: மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக இருக்கும் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தியில், " பாதுகாப்பு அலுவலர் பணிக்கு குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியல், சமூகப் பணி, சமூகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர் இப்பணிக்குத் தகுதியுடையவர்கள். கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகிய ஏதாவது ஒன்றில் 3 ஆண்டுகள் அனுபவம் இருப்பது அவசியம்.
பொது விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள், ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருப்பின் 62 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணி ஒப்பந்த நியமன அடிப்படையில் இருக்கும். தொகுப்பூதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு, மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கார்த்திக் நகர், தபால் தந்தி நகர், மதுரை -625017 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 0452-2642300..." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications