Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க வீட்டில் அரசு ஊழியர்கள் இருக்கிறார்களா? பென்ஷன் வாங்குறாங்களா? மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்ப விவரங்களிலிருந்து மகள்களின் பெயரை நீக்கக் கூடாது என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு அநீதிகள் தவிர்க்கப்பட்டு, நியாயம் உறுதி செய்யப்படும்.

ஓய்வு பெற்ற பிறகு அல்லது திருமணத்திற்குப் பிறகு மகளின் பெயரை குடும்பப் பட்டியலிலிருந்து நீக்க முடியுமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில், DoPPW இந்த தெளிவுபடுத்தலை வெளியிட்டது. ஒருமுறை மகளின் பெயர் சேர்க்கப்பட்டால், அது நிரந்தரமாக பதிவில் இருக்க வேண்டும் என்று DoPPW திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மகள்களின் பெயரை நீக்கக் கூடாது

குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி, ஓய்வூதியதாரர் அல்லது தற்போதைய குடும்ப ஓய்வூதியதாரர் மறைந்த பிறகு, விதிகளின்படி பின்னர் மதிப்பிடப்படும். மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021-ன் விதி 50(15) படி, ஒவ்வொரு அரசு ஊழியரும் பணியில் சேரும்போது முழுமையான குடும்ப விவரங்களை வழங்க வேண்டும்.

Daughters names can not be removed from the Union Government employees pension beneficeries name

மேலும், தங்கள் பணிக்காலம் முழுவதும் அதை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்தக் குடும்பப் பட்டியலில் வாழ்க்கைத் துணை (சட்டபூர்வமாகப் பிரிந்தவர்கள் உட்பட), மகன்கள் மற்றும் மகள்கள் (தற்போதைய, மறைந்த அல்லது விவாகரத்து பெற்ற துணை அல்லது செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்தவர்கள்), பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் ஆகியோர் அடங்குவர்.

லிஸ்ட் புதுப்பிக்கப்பட வேண்டும்

இந்த விவரங்கள் படிவம் 4 இல் அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, திருமணம், பிறப்பு அல்லது தத்தெடுப்பு போன்ற குடும்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படும்போது புதுப்பிக்கப்பட வேண்டும். தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களையும் DoPPW குறிப்பிட்டுள்ளது.

ஒரு குடும்ப உறுப்பினரின் பெயர் தவறுதலாக பதிவு செய்யப்படாமல் போனாலும், தகுதியை உறுதிப்படுத்த முடிந்தால், ஓய்வூதிய கோரிக்கை நிராகரிக்கப்படக்கூடாது. இது நிர்வாக தவறுகளால் சட்டப்பூர்வ உரிமையாளர்கள் பலன்களை இழப்பதைத் தடுக்கிறது. இருப்பினும், தற்போதைய விதிகளின் கீழ் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடைக்கு தகுதியற்ற மீண்டும் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

குடும்பப் பதிவுகளில் மகள்களின் பெயரை நிரந்தரமாகச் சேர்ப்பதைக் கட்டாயமாக்குவதன் மூலம், ஓய்வூதிய அமைப்பில் நியாயத்தையும் தொடர்ச்சியையும் வலுப்படுத்த முடியும். இந்த நடவடிக்கை ஓய்வூதிய செயலாக்கத்தை எளிதாக்கவும், சட்ட மோதல்களைத் தடுக்கவும், அனைத்து துறைகளிலும் விதிகள் சீராகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பென்ஷன்

இன்னொரு பக்கம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) இதுவரை வெறும் 4 சதவிகித மத்திய அரசு ஊழியர்களே மாறி உள்ளதாக கூறப்டுகிறது. மத்திய அரசு எதிர்பார்த்ததை விட இது மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் இத்திட்டத்திற்கு மாற அவகாசம் கிடைத்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 அன்று அமலுக்கு வந்தது.

தேசிய ஓய்வூதியத் திட்டம்

முன்னதாக, ஏப்ரல் 1, 2025 அன்று பணியில் இருந்த ஊழியர்கள், தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள், மற்றும் இறந்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் பெற்றனர். பின்னர், இந்தக் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசில் ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் தங்கள் படிவங்களை நேரடியாகவோ அல்லது பயிற்சி நிலையத் தலைவரிடமோ சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்கள் DDO-க்கு அனுப்பப்பட்டு, நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) உருவாக்கப்படும்.

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலிருந்து தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) ஒரே ஒரு முறை மட்டுமே மாற நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது விருப்ப ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்போ இந்த மாற்றத்தைச் செய்யலாம். ஒரு முறை ஓய்வூதிய முறையை மாற்றிய பிறகு, மீண்டும் அதை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+