"வீட்டில் இருந்தே வேலை".. HCL நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க மக்களே
சென்னை: முன்னணி ஐடி நிறுவமான எச்சிஎல்-லில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யவது நல்லது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் டெவலப்பர்ஸ் (Developers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ப்பட உள்ளனர். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
எச்சிஎல் டெவலப்பர்ஸ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ASP.net, C#, sharpoint 2019, SSIS, Powershell மற்றும் SQI உள்ளிட்ட ஸ்கில்ஸ்களில் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் நொய்டாவில் உள்ள எச்சிஎல்லின் தலைமை அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேபோல் வீட்டில் இருந்தும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம்.
இந்த பணிக்கான விண்ணப்ப தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications