Madurai IT Jobs: இந்த திறமை இருந்தாலே போதும்.. எச்சிஎல் நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவையான தகுதிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு: தமிழகத்தில் சென்னை, மதுரையில் எச்சிஎல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது மதுரையில் உள்ள அலுவலகத்துக்கு தான் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் ஜாவா ஸ்பிரிங்புட் டெவலப்பர் (Java Springboot Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஜாவா (Java) மற்றும் ஸ்பிரிங்புட் (Springboot) உள்ளிட்டவற்றில் நிபுணத்துவத்துடன் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி REST APIs மற்றும் Microservices உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சம் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பிக்க நினைப்போர் கீழே உள்ள அறிவிப்பின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications