சென்னையில் இன்று முதல் ஜனவரி 10 வரை இண்டர்வியூ.. HCL நிறுவனம் தரும் வேலைவாய்ப்பு
சென்னை: சென்னை நாவலூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இன்று (ஜனவரி 7) முதல் ஜனவரி 10ம் தேதி வரை இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கு பணி குறித்து இங்கு பார்க்கலாம்.
சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து தற்போது Bereavement Specialist பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதாவது Bereavement பற்றிய நல்ல அறிவு இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். இ-மெயில் அனுப்பவும், கடிதம் எழுதவும் தெரிந்நதிருக்க வேண்டும்.
அதேபோல் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் இன்று(ஜனவரி 7) முதல் ஜனவரி 10ம் தேதி நடைபெற நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் மதியம் 3 மணி வரை இண்டர்வியூ என்பது நடைபெறும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யபடலாம். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் 4 நாள் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூ என்பது HCL Technologies Ltd. ETA 3- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications