தபால் துறையில் மெகா வேலைவாய்ப்பு.. 28 ஆயிரம் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் பணி
சென்னை: தபால்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நாடு முழுக்க 28 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பளத்தை பொறுத்தவரை ரூ. 10 ஆயிரம் முதல் 29,380 வரை வழங்கப்படும்.
மத்திய அஞ்சலக துறை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் இந்த அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் என மத்திய அரசு விதிகளின்படி அனைத்து சம்பள படிகளும் கிடைக்கின்றன.

தபால்துறையில் வேலை
அஞ்சல் அல்லது தபால் துறை என அழைக்கப்படும் இந்த துறையில் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதில் கிராமின் டக் சேவக் (கிராம அஞ்சல் பணியாளர்கள்), பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.
நாடு முழுவதும் அரசு பணி கனவுடன் காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்திய அஞ்சல் துறை வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த சூழலில்தான் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த அஞ்சல் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* ஆந்திரப் பிரதேசம் 1,060
* அசாம் 639
* பீகார் 1,347
* சத்தீஸ்கர் 1,155
* டெல்லி 42
* குஜராத் 1,830
* ஹரியானா 270
* இமாச்சல பிரதேசம் 520
* ஜம்மு காஷ்மீர் 267
* ஜார்கண்ட் 908
* கர்நாடகா 1,023
* கேரளா 1,691
* மத்திய பிரதேசம் 2,120
* மகாராஷ்டிரா 3,553
* வடகிழக்கு 1,014
* ஒடிசா 1,191
* பஞ்சாப் 262
* ராஜஸ்தான் 634
* தமிழ்நாடு 2,009
* தெலுங்கானா 609
* உத்தரபிரதேசம் 3,169
* உத்தரகாண்ட் 445
* மேற்கு வங்கம் 2,982
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 40 வயதுக்குள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு:
ஜிடிஎஸ் (அஞ்சல் பணியாளர்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 24,470 வரை சம்பளமாக வழங்கப்படும். பிபிஎம் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரம் முதல் 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க பிப்ரவரி 14 ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் பிப்ரவரி 16 ஆகும்.
தேர்வு முறை:
10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
ஐடிஐபி வங்கியில் வேலை.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! மாதம் 50 ஆயிரம் சம்பளம்! -
தபால் பாஸ்புக் தொலைந்துவிட்டதா? புதிய பாஸ்புக் பெறுவது எப்படி... எல்லா ஊரிலும் வாங்க முடியமா? -
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்












Click it and Unblock the Notifications