இந்திய தபால் துறையில் 1899 பணியிடங்கள்.. வந்தது மெகா அறிவிப்பு.. தமிழகத்திற்கு செம்ம குட்நியூஸ்
டெல்லி: இந்திய அஞ்சல் துறையில் (தபால் துறை) அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட், தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர் என 1899 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://dopsportsrecruitment.cept.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://dopsportsrecruitment.cept.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய அஞ்சல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து அறிவிக்கை இணைப்பு உள்ளது. இந்த லிங்கில் விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 09ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் ஆட்சேர்ப்பு 2023: 1899 காலியிடங்களை நிரப்புவதற்காக அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட்,, தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி-டாஸ்கிங் பணியாளர் போன்ற பதவிகளுக்கான இந்திய அஞ்சல் துறை ஆட்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
கல்வி தகுதி: 10வது தேர்ச்சி/ 12வது தேர்ச்சி அல்லது இளங்கலைப் பட்டம் பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் தகுதி மற்றும் விருப்பம் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்-
வயது வரம்பு; குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
.
இந்தியா அஞ்சல்துறை ஆட்சேர்ப்பு 2023
காலிபணியிடங்கள்: 1899
பணி தரும் நிறுவனம்: இந்திய அஞ்சல், மத்திய அரசு
பணி விவரங்கள்: அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட், தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி-டாஸ்கிங் பணியாளர்கள்
காலியிடங்கள் 1899
வேலை வகை : மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 முதல் டிசம்பர் 9, 2023 வரை விண்ணப்பிக்கலாம்
தகுதி : தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள்
சம்பளம் ரூ. 18000 முதல் 25000 (ஆரம்ப சம்பளம்)
தேர்வு முறை: தகுதி அடிப்படையில் நடைபெறும்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://dopsportsrecruitment.cept.gov.in/
இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட 1899 காலியிடங்களில், 598 தபால் உதவியாளர் பணியிடங்களும், 143 ஷார்டிங் அசிஸ்டண்ட் பணியிடங்கள், 585 தபால்காரர் பணியிடங்களும், 3 மெயில் கார்டு பணியிடங்களும், 570 மல்டி டாஸ்கிங் பணியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் பல்வேறு மாநிலங்களில காலியாக உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 110 தபால் உதவியாளர் பணியிடங்களும், 19 ஷார்டிங் அசிஸ்டண்ட் பணியிடங்கள், 108 போஸ்ட் மேன் பணியிடங்கள், 124 மல்டி டாஸ்க் பணியிடங்கள் காலியாக உள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அதிக காலி பணியிடங்கள் உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications