இந்திய தபால் துறையில் 1899 பணியிடங்கள்.. வந்தது மெகா அறிவிப்பு.. தமிழகத்திற்கு செம்ம குட்நியூஸ்
டெல்லி: இந்திய அஞ்சல் துறையில் (தபால் துறை) அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட், தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர் என 1899 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://dopsportsrecruitment.cept.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://dopsportsrecruitment.cept.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய அஞ்சல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து அறிவிக்கை இணைப்பு உள்ளது. இந்த லிங்கில் விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 09ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் ஆட்சேர்ப்பு 2023: 1899 காலியிடங்களை நிரப்புவதற்காக அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட்,, தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி-டாஸ்கிங் பணியாளர் போன்ற பதவிகளுக்கான இந்திய அஞ்சல் துறை ஆட்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
கல்வி தகுதி: 10வது தேர்ச்சி/ 12வது தேர்ச்சி அல்லது இளங்கலைப் பட்டம் பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் தகுதி மற்றும் விருப்பம் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்-
வயது வரம்பு; குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
.
இந்தியா அஞ்சல்துறை ஆட்சேர்ப்பு 2023
காலிபணியிடங்கள்: 1899
பணி தரும் நிறுவனம்: இந்திய அஞ்சல், மத்திய அரசு
பணி விவரங்கள்: அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட், தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி-டாஸ்கிங் பணியாளர்கள்
காலியிடங்கள் 1899
வேலை வகை : மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 முதல் டிசம்பர் 9, 2023 வரை விண்ணப்பிக்கலாம்
தகுதி : தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள்
சம்பளம் ரூ. 18000 முதல் 25000 (ஆரம்ப சம்பளம்)
தேர்வு முறை: தகுதி அடிப்படையில் நடைபெறும்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://dopsportsrecruitment.cept.gov.in/
இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட 1899 காலியிடங்களில், 598 தபால் உதவியாளர் பணியிடங்களும், 143 ஷார்டிங் அசிஸ்டண்ட் பணியிடங்கள், 585 தபால்காரர் பணியிடங்களும், 3 மெயில் கார்டு பணியிடங்களும், 570 மல்டி டாஸ்கிங் பணியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் பல்வேறு மாநிலங்களில காலியாக உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 110 தபால் உதவியாளர் பணியிடங்களும், 19 ஷார்டிங் அசிஸ்டண்ட் பணியிடங்கள், 108 போஸ்ட் மேன் பணியிடங்கள், 124 மல்டி டாஸ்க் பணியிடங்கள் காலியாக உள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அதிக காலி பணியிடங்கள் உள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications