IT JOBS: அனுபவம் வேண்டாம்.. B.sc, BCA உள்ளிட்ட ஒரு டிகிரி போதும்.. அழைக்கும் Cognizant
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 3 பிரிவுகளில் நியமனங்கள் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாகும். பிஎஸ்சி, பிசிஏ உள்பட பிற பிரிவுகளில் டிகிரி படித்து அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் உள்ளது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தற்போது காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshersகளுக்கான வேலைவாய்ப்பாகும்.
மொத்தம் 3 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி முதலில் நாம் பார்ப்பது Analyst Trainee Aligned to IT and Integrated smart operation பணியாகும். இந்த பணிக்கு 2024 அல்லது 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி (Allied Streams), கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கண்டிப்பாக அரியர்ஸ் இருக்க கூடாது. இவர்கள் 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி டைம் மேனேஜ்மென்ட் ஸ்கில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், டீமாக சேர்ந்து பணியாற்றும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும். கிரிட்டிக்கல் திங்கிங் இருக்க வேண்டும்.
2வது நாம் பார்ப்பது Analyst Trainee aligned to Multicloud பணியாகும். இந்த பணிக்கு ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் 2024 அல்லது 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிபிஏ, பிகாம், Bvoc, BMS உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது.
3வது வேலை என்பது Analyst Trainee aligned to digital workplace services.இந்த பணிக்கும் 2024 அல்லது 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிபிஏ, பிகாம், Bvoc, BMS உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட் பார்ப்போருக்கு அலோவன்ஸ் உண்டு. அதேபோல் இந்தியாவில் எந்த நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் அங்கு சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இது ஒரு PAN India பணியாகும்.
தமிழகத்தில் சென்னை, கோவையிலும் இந்த நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவையில் பணி கிடைக்கலாம். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர், இந்தூர் உள்பட பல இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் இருக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தேதி முடிவதற்கு முன்பாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம்(அதிகபட்சம் 2 பக்கம்) , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும. கல்லூரி ஐடி கார்டு, பள்ளி, கல்லூரிக்கான மார்க் ஷீட் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். பான் கார்டு இருக்க வேண்டும். பான் கார்டில் பெயர், அப்பா பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
அதேபோல் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இருக்க வேண்டும். காக்னிசண்ட்டில் கடந்த 6 மாதங்களில் இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் இதில் பங்கேற்க வேண்டாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மிகப்பெரிய பிரச்சனையில் இந்தியா.. ஈரான் விஷயத்தை விடுங்க! இதை கவனிக்காம விட்டா ரொம்ப டேஞ்சர் -
IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல்-லில் மார்ச் 20ல் இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரில் பணி -
மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்! -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications