ரெடியா.. நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் பணி.. 8 ஆம் வகுப்பு தகுதி போதும்.. மாதம் 50 ஆயிரம் வரை சம்பளம்
சென்னை: நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு அபளை செய்வதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தவர்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான முழு விவரங்களை இங்கே காணலாம்.

சம்பள விவரம்: அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள்: அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதேபோல், BC மற்றும் MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது. SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி மற்றும் பிற பகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆப்லைன் மூலமாக இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://nigirin.rig.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தொடர்ந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.07 .2023 பிற்பகல் 05.45 மணிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பி விட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications