கண்ணா லட்டு தின்ன ஆசையா.. கடற்படை, விமானப்படையில் ஒரே நேரத்தில் அழைப்பு.. ரெடியா?
சென்னை: இலவசமாக பிடெக் படித்து கடற்படையில் கையோடு அதிகாரியாக விரும்புவோருக்கு இந்திய கடற்படை நல்ல வாய்ப்பு வழங்கி உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஜூன் 30ம் தேதி கடைசி தேதியாகும். இதேபோல் விமானப்படையிலும் அதிகாரியாக விண்ணப்பிக்கலாம்.
இந்திய கடற்படையின் பொறியியல் துறையில் 10, +2, பி.டெக் நுழைவு திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கு இலவச பி.டெக் படிப்பில் சேர்ந்து பட்டம் பெறலாம். அத்துடன் இந்திய கடற்படையில் அதிகாரியாகவும் பணிபுரியலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: ஆபீசர் (Executive & Technical Branch )
மொத்த காலியிடம்: 30
வயது: 2.7.2004-க்கும் 1.1.2007 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கடற்படை தெரிவித்துள்ளது.
எப்படி தேர்வு செய்யப்படவார்கள் JEE Main Exam -2023 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.6.2023
விமானப்படை வேலை: இந்திய கடற்படையைப் போல் இந்திய விமானப்படையிலும் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிபுரிய இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
என்னென்ன பணியிடங்கள் உள்ளன என்பதை பார்ப்போம். ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங் 11, கிரவுண்ட் டியூட்டி 265 (டெக்னிக்கல் 151, நான் டெக்னிக்கல் 114) என மொத்தம் 276 காலியிடங்கள் இருக்கின்றன.
என்ன கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: பிளையிங் பிரிவுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும்.
கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் பட்டம். டெக்னிக்கல் அல்லாத பிரிவுக்கு ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: 1.7.2024 தேதியின்படி பிளையிங் பிரிவுக்கு 20 - 24 வயதிற்குள்ளும், கிரவுண்ட் டியூட்டி பிரிவிக்கு 20 - 26 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் எப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்: எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம் எங்கெல்லாம் இருக்கும் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 30.6.2023
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications