நம்ம சென்னையில்... இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய ஆசையா? அப்போ இதை முதல்ல படிங்க
மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய குடிமகன்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தேவைப்படும் ஆவணம் பாஸ்போர்ட். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பாஸ்போர்ட்டை அளிக்கும் பணியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பாஸ்போர்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் துணை பாஸ்போர்ட் அதிகாரி ஆகிய பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியாக உள்ள பணியிடங்கள்: பாஸ்போர்ட் அதிகாரி - 3, துணை பாஸ்போர்ட் அதிகாரி - 13
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: பாஸ்போர்ட் அதிகாரி ரூ. 78,800 முதல் ரூ.2,09,200 வரை; துணை பாஸ்போர்ட் அதிகாரி - ரூ.67,700 முதல் ரூ. 2,08,700 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mea.gov.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்துச் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: மார்ச் 1
கூடுதல் தகவல்களுக்கு: