Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026ல் சூப்பர் வாய்ப்பு.. கை நிறைய சம்பளம்! திருச்சி NIT வேலை! எப்படி விண்ணப்பிப்பது! முழு விபரம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்பக் கழகமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (NIT Trichy) தற்போது 2026ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலம், குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளில் காலியாக உள்ள 18 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி என்.ஐ.டி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் உயரிய கல்வி நிறுவனம். இங்கு பணிபுரிவது என்பது பலரின் கனவாக இருக்கிறது. இந்நிலையில், ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

jobs NIT Trichy Recruitment

இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் அசிஸ்டென்ட் மற்றும் சூப்பிரண்டெண்ட் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அடிப்படை கணினி அறிவு அவசியமாகும். மேலும், தட்டச்சு திறன் அல்லது சுருக்கெழுத்து திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக நிர்வாக பணிகளுக்கு தேவையான அடிப்படை அனுபவம் உள்ளவர்களும் இந்த பணிகளுக்கு பொருத்தமானவர்களாக கருதப்படுவார்கள். இந்த பணிகளுக்கான வயது வரம்பு தொடர்பாகவும் தெளிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சீனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சூப்பிரண்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதே நேரத்தில், மத்திய அரசு விதிமுறைகளின் படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான தேர்வு நடைமுறை பல கட்டங்களாக நடைபெறும். முதற்கட்டமாக, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின்னர் ஸ்கிரீனிங் தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைமுறை முழுவதும் நியாயமான முறையில் நடைபெறும் என என்.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்கு ஆர்வமுள்ளவர்கள், திருச்சி என்.ஐ.டி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nitt.edu என்ற இணைய முகவரியில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது கல்வித் தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். தவறான தகவல்கள் வழங்கப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 2026 ஜனவரி 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, தகுதியுள்ளவர்கள் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+