அனுபவம் வேண்டாம்.. சென்னையில் ஐடி வேலை.. 2025ல் படிப்பை முடிப்பவர்களுக்கு சான்ஸ்! அழைக்கும் நிறுவனம்
சென்னை: சென்னையில் இயங்கி வரும் பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2025ம் ஆண்டில் படிப்பை முடிக்கும் முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ப்ரோபல் (Propel). இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி ப்ரோபல் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான கல்வி தகுதி உள்பட பிற விபரங்கள் வருமாறு:
சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2025ம் ஆண்டில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் கல்லூரி படிப்பை முடிப்பவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் பணி அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி புரோகிராமிங்கில் ஸ்ட்ராங்க் ஃபண்டமென்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். குறுிப்பாக c, c++, Java, C#, Pythone, JavaScript உள்ளிட்ட ஏதேனும் ஒரு ப்ரோகிராமிங் லேங்குவேஜை நன்கு கற்று தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டா பேசஸ், டேட்டா ஸ்டெக்சர்ஸ், ஓஓபிஎஸ் பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும்.
இதுதவிர Common Application/Web Security, OWASP Vulnerabilities பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சகைனளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா பேசஸ், டேட்டா ஸ்ட்ரெக்சர், ஓஓபிஎஸ் உள்ளிட்டவை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முதலில் Aptitude Test அதன்பிறகு Programming Test நடத்தப்படும். அதன்பிறகு இண்டர்வியூ முறையில் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். இதில் முதல் 6 மாதம் என்பது பயிற்சி காலமாகும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யவது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications