ரெடியா? கைநிறைய சம்பளம்.. 12ம் வகுப்பு முடித்தாலே போதும்.. புதுச்சேரி ஐசிஎம்சிஆர்ஐ-யில் அரசு வேலை!
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 1,225 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பணியை எளிமையாக பெற முடியும்.
புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஐஜிஎம்சிஆர்ஐ) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மொத்தம் 1,225 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி மல்டிபர்பஸ் வொர்க்கர்(Multipurpose Worker) பணிக்கு 225 பேர், மல்டிபர்பஸ் வொர்க்கர் (Multipurpose Worker- Group C) பணிக்கு 1000 பேர் என மொத்தம் 1,225 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இவர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.20,200 வரை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 12ம் தேதிக்குள் igmcri.edu.in இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.
மல்டிபர்பஸ் வொர்க்கர் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
மல்டிபர்பஸ் வொர்க்கர் குரூப் சி பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications