தலைநகர் டெல்லி செல்ல ரெடியா?.. வருமான வரித் துறையில் சூப்பர் போஸ்ட்டிங்கில் காலிப்பணியிடங்கள்
சென்னை: மத்திய அரசின் வருமான வரித் துறையில் விளையாட்டு துறையினருக்கான 14 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் நிலை 2 மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் தில்லிக்காக நிரப்பப்படவுள்ளன. Income Tax Inspector பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இதற்கான மாத ஊதியம் 9,300- 34,800+ தர ஊதியம் ரூ 4,600 ஆகும்.
Tax Assistant பணிக்கு 4 காலிப்பணியிடங்களும் Stenographer Grade 2 பணிக்கு 3 காலிப்பணியிடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு ஊதியமாக மாதம் ரூ 5,200- 20,000+ தர ஊதியம் ரூ 2,400 ஆகும். Multi Tasking Staff பணிக்கு 6 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ 5,200- 20,200+ தர ஊதியம் ரூ 1,800 வழங்கப்படும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதாவது துறையில் இளநிலை பட்டம், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் சுருக்கெழுத்து பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 27 முதல் 30 இருத்தல் வேண்டும். விளையாட்டுத் துறையில் பெற்ற சான்றிதழ்கள், உடல்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு https://www.incometaxdelhi.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சான்றொப்பம் பெறப்பட்ட சான்றுகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications