SEBI-யில் அரசு வேலை.. மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், அதாவது செபி தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியாக இருக்கும் 110 கிரேட் ஏ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் கடைசித் தேதி குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் பங்குச்சந்தைகள் முறையாகச் செயல்படுகிறதா.. அதில் ஏதாவது தவறு நடக்கிறதா என்பதைச் செபி எனப்படும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தான் கண்காணிக்கும்.. இது மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். இந்த செபி அமைப்பில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செபி
தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் உதவி மேலாளர் (ஆஃபீசர் கிரேடு ஏ) பணிகளை நிரப்பவுள்ளதாகச் செபி அறிவித்துள்ளது.. இதன் மூலம் 110 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், செபியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இப்போதே செபி இணையதளத்திற்குச் சென்றால் இந்த வேலைக்காக விண்ணப்பிக்காமல்.. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 28 ஆகும்.. தொடர்ந்து முதல் கட்டத் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி நடைபெறும்.. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் கடைசியில் நேர்முகத் தேர்விலும் பாஸ் ஆக வேண்டும்.
காலியிடங்கள்
பொதுப் பிரிவு 56, சட்டப் பிரிவு 20, தகவல் தொழில்நுட்பம் 22, ஆராய்ச்சிப் பிரிவு 4, அலுவல் மொழிப் பிரிவில் 3 மற்றும் பொறியியல் பிரிவு 5 என மொத்தமாக 110 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சம்பளம் ரூ 62,500 முதல் ரூ.1.05 லட்சம் வரை கிடைக்கும்.
கல்வித் தகுதி
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் செக் செய்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு செயல்முறை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு தலா 100 மதிப்பெண்கள் இரு தேர்வுகள் நடக்கும். இரண்டாம் கட்டத்திலும் தலா 100 மதிப்பெண்கள் கொண்ட இரு தேர்வுகள் நடைபெறும். கடைசியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது, ஓபிசி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு ₹1,000 மற்றும் 18% ஜிஎஸ்டி ஆகும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ₹100 மற்றும் 18% ஜிஎஸ்டி ஆகும். டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங், ஐஎம்பிஎஸ் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்!
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications