கைநிறைய சம்பளம்! இந்திய பங்கு சந்தை நிறுவனமான ‛செபி’யில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு!
மும்பை: இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் கைநிறைய சம்பளத்தில் உதவி மேலாளர் பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
செபி (SEBI or Securities and Exchange Board of India) என்பது இந்தியாவில் பங்கு சந்தை, நிதிச் சந்தைகளை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த அறிவிப்பின் சில முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
செபி நிறுவனத்தில் மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. Officer Grade A (Assistant Manager) பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பிஇ அல்லது முதுகலை பட்டப்படிப்பை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு-ஊதியம் என்ன?
விண்ணப்பத்தாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி, ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. வயதானது 2022 ஜூன் மாதம் 30ம் தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். அடிப்படை சம்பளமாக ரூ.44,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிற அலோவன்ஸ்கள் உண்டு.

தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை எழுத்து தேர்வு ஆகஸ்ட் 27 ம் தேதியும், 2ம் நிலை எழுத்து தேர்வு செப்டம்பர் 24ம் தேதியும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேதி அறிவிக்கப்பட்டு நேர்க்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sebi.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய 31.07.2021 என்பது கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்க ரூ.100 கட்டணமாக உள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புவோர் www.sebi.gov.in இணையதளம் சென்று Careers என்பதை கிளிக் செய்து SEBI Assistant Manager தொடர்பான அறிவிப்பை கிளிக் செய்து, பதிவு செய்ய வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்கள் அறிய Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications