தமிழக போலீஸ் வேலைவாய்ப்பு 2023.. 3,359 காவலர் பணியிடங்கள்.. சம்பளம் முதல் தகுதி வரை.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டு இளைஞர்களே போலீஸ் வேலையில் சேர விரும்புகிறீர்களா..இதோ உங்களுக்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர் பணிக்கு வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
போலீஸ் வேலையில் எப்படியாவது சேர வேண்டும்என்று பலரும் ஆசைப்படுவார்கள். போலீஸ் என்பது பலருக்கும் கனவு போல், அந்த காக்கி உடையின் மீது உள்ள ஆசையில் அதற்காக தவம் இருப்பவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். காவலராக பணியில் சேர்ந்து அதன்பின்னர் உயர் தேர்வுகள் எழுதி பெரிய உயர் அதிகாரியாகவும் மாற முடியும்.
https://drive.google.com/file/d/1x-RjQPTK5pxdYfHcS3fRWiatpJcQxsUa/view?usp=sharingபணி பாதுகாப்பு மற்றும் சம்பளம் மற்றும் மரியாதை ஆகியவை தான் காவல்துறை பணியின் மீது பலருக்கும் ஈடுபாடு வரக் காரணமாக உள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கான அறிவிப்பு முறைப்படி நேற்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது : "தமிழக காவல் துறையில் 2-ம் நிலை ஆண், பெண் காவலர்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் சிறைத்துறையில் 2-ம் நிலை சிறை காவலர்கள் வேலைக்கும், தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் வேலைக்கும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காவல் துறையில் 2-ம் நிலை பெண் காவலர்கள் (மாவட்ட-மாநகர ஆயுதப்படை) 780 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2-ம் நிலை ஆண் காவலர்கள் 1,819 பேர் தேர்வாக உள்ளனர். சிறைத்துறையில் 2-ம் நிலை சிறைக்காவலர் பதவிக்கு 3 பெண்கள் உள்பட 86 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் வேலைக்கு 674 ஆண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தமிழக காவல்துறையில் 3,359 பேர் புதிதாக பல்வேறு பணிகளுக்கு தேர்வாக இருக்கிறார்கள். இதற்கு 'ஆன்லைன்' மூலம் வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் விண்ணபிக்கலாம் . இணையவழி மூலம் விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 17-ந் தேதி ஆகும். இதற்கான எழுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான மோசடி லிங்கில் விண்ணப்பித்துவிடாதீர்கள்.
இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயதாகவும், அதிகபட்சம் 26 வயதாகவும் இருக்க வேண்டும். (வயது உச்ச வரம்புகள் ஒவ்வொரு (பிசி, எம்பிசி, எஸ்சி மற்றும் எஸ்சி பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் பாடத்திட்டம் பிடிஎப் ஆக இணைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் பாருங்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications