TCS-ல் 40,000 வேலைவாய்ப்பு.. Freshers-க்கு அடிக்கும் யோகம்.. ஐடி நிறுவனத்தின் பலே திட்டம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ல் நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் freshers-களை பணியமர்த்துவது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பிரபலமான பல ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) நிறுவனம். இந்த நிறுவனம் ஹைதராபாத் உள்பட நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இதுதவிர வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா உள்பட வெளிநாடுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது
அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் 40 Freshers-களை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்த காலாண்டின் ஜுன் மாதத்தில் மட்டும் 5,452 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் பணியாளர்களின் எண்ணிக்கை என்பது 6,06,998 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர இன்னும் 34 லட்சத்து 540 பேருக்கு வரும் நாட்களில் பணி என்பது உள்ளது.
இதுதொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் சிஎச்ஆர்ஓ, மிலிந்த் லக்காட் கூறுகையில், ‛‛இந்தியா என்பது திறமையாளர்களின் குவியிடமாக உள்ளது. இது எதிர்காலத்திலும் மாறாது. இந்தியாவில் உள்ள திறமையாளர்களை பணியமர்த்தும் முயற்சியுடன் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்.
டிசிஎஸ் நிறுவனத்தில் 4.5 சதவீதம் முதல் 7 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வு என்பது வழங்கப்பட உள்ளது. மிகவும் சிறப்பாக செயல்படும் பணியாளர்களுக்கு 10-12 சதவீத சம்பள உயர்வு என்பது வழங்கப்படுகிறது. Freshers பணியாளர்களுக்கு விரைவாக தொழில் கற்று கொடுத்து ஊதியத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications