சென்னையில் பயிற்சி மருத்துவர்களுக்கு உடனடி வேலை.. ரூ.40000 சம்பளம்.. சென்னை மாநகராட்சி அழைப்பு
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஆர்வமுள்ள பயிற்சி மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள பயிற்சி மருத்துவர்கள் 3மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ள இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 13.05.2021 தேதி மதியம் 2.00 மணிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களக்கு 91-44-25619330 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
காலி பணியிடங்கள்:
பயிற்சி மருத்துவர்கள் : 300
குறைந்தபட்ச கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு mbbs படிக்கும் மாணவர்கள்.
மாத ஊதியம்: ரூ.40000
நிபந்தனைகள்:
மேற்கொண்ட பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம செய்யப்படாது.
பணயில் சேருவதற்கு சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) சமர்பிக்க வேண்டும்.
மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பயிற்சி மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதார்களுக்கு 13.05,2021 அன்று தொலைபேசி மூலமாக (telephonic interview) நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் 14.052021 தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.
வழிமுறைகள்
இறுதி ஆண்டு மாணவர்ககள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியவை.
சுயவிவரம் (resume)
இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டிற்கான மதிப்பெண் சான்றிதழ் (pre final year list)
பன்னிரெட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
கல்லூரி அடையாள அட்டை " இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.