"அனுபவம் வேண்டாம்".. டிகிரி மட்டுமே போதும்.. Zoho தரும் அசத்தலான வேலைவாய்ப்பு.. ரெடியா?
சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு எந்தெந்த தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஜோஹோ ஐடி நிறுவனத்தில் தற்போது எஸ்ஆர் இ (SRE) எனும் Site Reliability Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிஎஸ்சி, பிசிஏ, பிஏ, பிஇ, பிடெக் உள்பட எந்த பிரிவில் படிப்பை முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

2026ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம் - பணி அனுபவம் இல்லாதவர்கள் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி பார்த்தால் விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் கிளவுட் ஆட்டோமேஷன், கிளவுட் இன்ஃப்ராஸ்ரெக்ச்சர், அல்லது எஸ்ஆர்இ சம்பந்தப்பட்ட ரோலில் 0-2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி Bash, Shell அல்லது பைத்தான் ஸ்கிரிப்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் கிளவுட் நெட்வொர்க்கிங், செக்யூரிட்டி கான்செப்ட்ஸ் மற்றும் ஐேஎம் ஃபண்டமென்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் புரோகிராமிங் லேங்க்வேஜில் சி, சி++, ஜாவா/பைத்தான் ஆகியவற்றில் ஏதேனம் ஒன்று தெரிந்திருக்க வேண்டும். நெட்வொர்க்கிங் டூல்ஸை எடுத்து கொண்டால் netstat, ping, tracerourte, nc, ssh/scp, wireshark, tcpdum உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் SRE பிராக்டிசில் SLIs, SLOs மற்றும் SLAs உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர மேலும் சில தகுதிகள் உள்ளன. அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணி என்பது 24X7 என்ற முறையில் இருக்கும். இதனால் ஷிப்ட் அடிப்படையிலும், நைட்ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இன்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications