"அனுபவம் வேண்டாம்".. டிகிரி மட்டுமே போதும்.. Zoho தரும் அசத்தலான வேலைவாய்ப்பு.. ரெடியா?
சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு எந்தெந்த தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஜோஹோ ஐடி நிறுவனத்தில் தற்போது எஸ்ஆர் இ (SRE) எனும் Site Reliability Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிஎஸ்சி, பிசிஏ, பிஏ, பிஇ, பிடெக் உள்பட எந்த பிரிவில் படிப்பை முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

2026ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம் - பணி அனுபவம் இல்லாதவர்கள் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி பார்த்தால் விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் கிளவுட் ஆட்டோமேஷன், கிளவுட் இன்ஃப்ராஸ்ரெக்ச்சர், அல்லது எஸ்ஆர்இ சம்பந்தப்பட்ட ரோலில் 0-2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி Bash, Shell அல்லது பைத்தான் ஸ்கிரிப்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் கிளவுட் நெட்வொர்க்கிங், செக்யூரிட்டி கான்செப்ட்ஸ் மற்றும் ஐேஎம் ஃபண்டமென்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் புரோகிராமிங் லேங்க்வேஜில் சி, சி++, ஜாவா/பைத்தான் ஆகியவற்றில் ஏதேனம் ஒன்று தெரிந்திருக்க வேண்டும். நெட்வொர்க்கிங் டூல்ஸை எடுத்து கொண்டால் netstat, ping, tracerourte, nc, ssh/scp, wireshark, tcpdum உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் SRE பிராக்டிசில் SLIs, SLOs மற்றும் SLAs உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர மேலும் சில தகுதிகள் உள்ளன. அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணி என்பது 24X7 என்ற முறையில் இருக்கும். இதனால் ஷிப்ட் அடிப்படையிலும், நைட்ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இன்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications