ஜனங்களே பார்த்துக்கோங்க...!
'கொள்கைவாதி' கவுண்டமணியிடம் பத்திரிகையாளர் செந்தில் பேட்டி எடுத்த போது..
செந்தில்: மக்களே வணக்கம்.. அண்ணன் 'கொள்கை குன்று' என்ற பட்டபெயர்..
கவுண்டர்: பன்னாடை நிறுத்துடா... எங்களுக்கு வெச்சா அது பட்டப் பெயர்.. உங்களுக்கு வெச்சா அது ரொம்ப புனிதமாடா
செந்தில்: அண்ணே.. நீங்க உங்க வீட்டுல குடியிருந்தவங்களை கோர்ட்ல ஏத்தி குடைஞ்சு எடுத்திட்டீங்களாமே..
கவுண்டர்: அதுதான் ஊரறிஞ்ச விசயமாச்சே .. வேற கேள்வி கேளுடா
செந்தில்: அண்ணே ஏன்னா..பக்கத்து ஆத்துகாரனை கோர்ட்ல ஏத்தலை?
கவுண்டர்: அவன் என்னை தொந்தரவு செய்யலையே
செந்தில்: அண்ணே நீங்க ஏன்னே 58வது தெருவுல இருக்கிற அந்த ஆளை கோர்ட்டுல ஏத்தலை
கவுண்டர்: டே.. அற்பா! உனக்கு பிடிக்காதவன் பேரெல்லாம் சொல்லி என்னை சண்டைகட்ட சொல்றயா?
செந்தில்: அப்படி இல்லைன்னே... அதாவது
கவுண்டர்: பேரிக்கா மண்டையா .. என் அருமை பெருமை கொள்கை பற்றி பேட்டி எடுக்கிறதை விட்டுவிட்டு... ஏன்டா சண்டை மூட்டி விடுற... உன்னால முடிஞ்சா நீ மோதுடா
செந்தில்: அது இல்லைங்கண்ணே.. நீங்க ஏன் அவங்களோட சண்டை போடலை?
கவுண்டர்: பரதேசிப்பயலே. நான் நியாயத்துக்குப் போராடுறவன்.. தைரியம் இருந்தா நீ போய் சண்டை கட்டுறா.
செந்தில்: அதுவந்து...
கவுண்டர்(கோபத்தில்): மக்களே பார்த்துங்க.. (செந்தில் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டு) நான் இவன் கூட சண்டை போட்டு செவுளிலேயே நாலு சாத்து சாத்திட்டேன். இதை வெச்சும் ஒரு பேட்டிக்கு கூப்புடுங்கடா... பேப்பசங்களா












Click it and Unblock the Notifications