இப்பவாச்சும் ஒண்ணா சேந்துச்சே...!
அந்தம்மா உண்மையிலேயே பெரிய பொறுமைசாலிதான். மொத்தம் 3 புருஷன். 25 பிள்ளைகள். இருந்தாலும் அசரவில்லை.
முதல் புருஷன் மூலம் 13 பிள்ளைகளைப் பெற்றாள். பின்னர் முதல் புருஷன் இறந்து போக 2வது கல்யாணம் செய்து கொண்டு அவர் மூலம் ஒரு 7 குழந்தைகளைப் பெற்றாள். ஒரு கட்டத்தில் அவனும் செத்துப் போனான். இருந்தாலும் விடாமல் மீண்டும் கல்யாணம் செய்த அப்பெண், 3வது புருஷன் மூலம் 5 பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.
அதற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு நேரம் சரியில்லை, செத்துப் போனாள். ஊரே கூடி அநத்ப் பெண்ணின் இறுதிச் சடங்குக்கு வந்து சேர்ந்தனர். அப்போது ஒருவர், நல்ல பொண்ணுப்பா, இப்பவாச்சும் 'சேர்ந்திருக்க' நேரம் கிடைச்சுதே என்று அங்கலாய்த்தார்.
அதைக் கேட்டு அருகில் குந்த வைத்து உட்கார்ந்திருந்த ஒருவர், ஏண்ணே நீங்க யாரைச் சொல்றீங்க, அந்தப் பெண்ணையும், அவளுடைய கணவர்களையும்தானே சொல்றீங்க என்று கேட்டான்.
அதற்கு முதலில் பேசிய நபர் சொன்னார், அட நீ வேறப்பா, செத்ததுக்கப்புறமாவது அவளுடைய ரெண்டு கால்களையும் சேர்த்து வச்சிருக்க நேரம் வந்துச்சே அப்படின்னு சொல்ல வந்தேன் என்று கூறியபடி நடையைக் கட்டினார்....