அது அவன் இல்லை...!
மொக்கச்சாமி வாயில் பீடாவைப் போட்டு குதப்பியபடி தனது கடையில் உட்கார்ந்திருந்தார் - புண்ணாக்கு வியாபாரம் செய்கிறார். அவரது கடையை நோக்கி வேகமாக வந்தார் வெள்ளிங்கிரி.
ஏம்ப்பா மொக்கச்சாமி, அங்க நடக்கிற கூத்து தெரியாம இங்க என்னத்த புண்ணாக்கு விக்கிறே நீ என்று கோபமாக கேட்டார்.
அப்படி என்னப்பா நடந்துருச்சு, நடக்கக் கூடாதது என்று வெள்ளிங்கிரியைப் பார்த்துக் கேட்டார் மொக்கச்சாமி.
அதற்கு வெள்ளிங்கிரி, உன்னோட நண்பன் ஒருத்தன் நீ இல்லாத நேரம் பார்த்து உன்னோட வீட்டுக்குள்ள புகுந்து உன்னோட மனைவிக்கு முத்தம் கொடுக்கிறான்யா. பார்த்துட்டு ஓடியாந்தேன் என்றார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மொக்கச்சாமி, வேகமாக வீட்டுக்கு ஓடினார். போன வேகத்தில் திரும்பி வந்தார். கடையில் இருந்த வெள்ளிங்கிரியைப் பார்த்து, யோவ், முத்தம் கொடுத்ததெல்லாம் உண்மைதான். ஆனா அது என்னோட நண்பன் இல்லை ஓய், வேற யாரோ என்று கூறியபடி மீண்டும் கடைக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்....!












Click it and Unblock the Notifications