அவனும் இதையேதான் சொன்னான்...!
திருமணமாகி ஆறே மாதங்களில் ஆசை மனைவியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான் கணவன். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது, இனியும் நீ வீட்டுக்கு திரும்பி வரணும்ன்னு நெனச்சா பைக்கோட வா, இல்லாட்டி, உங்க வீட்டுலையே இருந்திடு. கண்ணீருடன் கிளம்பிச் சென்றாள் மனைவி.
ஆனால் மறுநாள் காலையிலேயே கதவை தட்டினாள் மனைவி. கதவை திறந்த கணவனுக்கு இன்ப அதிர்ச்சி. வாசலில் அவன் ஆசைப்பட்ட பைக்கும் இருந்தது. உடனே மனைவியை வீட்டினுள் அழைத்து சென்று அன்புடன் கொஞ்சினான்.
உன்னை நான் பேசக்கூடாத வார்த்தைல்லாம் பேசிட்டேன் என்னை மன்னிச்சிடு என்று கெஞ்சலாக கூற, மனைவி லேசாக புன்னகைத்துக் கொண்டாள்.
பின்னர் இருவரும் ஜோடியாக பைக்கில் ஏறி ரவுண்டுக்குக் கிளம்பினர். கணவனின் இடுப்பை சுற்றி வளைத்து பற்றியபடி அமர்ந்திருந்த மனைவி, என்னங்க என்று கணவனை அழைத்தாள்.
என்னடி கண்ணு சொல்லு என்றான் கணவன்.
பைக் ஓட்டுறதுக்கு நல்லா இருக்குதாங்க என்றாள் மனைவி
நல்லா இருக்குதாவா.. ச்சும்மா குதிரையில உக்காந்து சவாரி போற மாதிரியே இருக்கு என்றான் கணவன்.
அதற்கு அவள், இதையேதாங்க ...அவனும் சொன்னான் என்றாள்.
தூக்கி வாரிப் போட்ட கணவன், அவனா..யாரு அது என்று கிலியுடன் கேட்டான்.
அதற்கு அவள் சொன்னாள்...அவன்தாங்க, இந்த பைக்கை இதுக்கு முன்னாடி வச்சிருந்தவன். நேத்து ராத்திரி என்கிட்ட இப்படி சொன்னான்...!!












Click it and Unblock the Notifications