துப்பட்டா பறந்தா அதிர்ஷ்டம்.... கண்ணுல தூசி விழுந்தா துரதிர்ஷ்டம்!!
Subscribe to Oneindia Tamil
வேலை வெட்டியே இல்லாத சீனியும், கோவாலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெட்ட வெயிலில் மட்ட மல்லாக்க திண்ணையில் படுத்தபடி கதை பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் நடந்த 'சம்பாஷனை'...
சீனி - எது அதிர்ஷ்டம்.. எது துரதிர்ஷ்டம்...தெரியுமா கோவாலு...?
கோவாலு - தெரியலையே சீனி.. நீயே சொல்லேன்...
சீனி - ஒரு அழகான பெண்ணை நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். அப்போது பார்த்து காற்று பலமாக அடிக்கிறது. அப்பெண்ணின் துப்பட்டா பறக்கிறது.. அது அதிர்ஷ்டம்.
கோவாலு - அப்படீன்னா, துரதிர்ஷடம்...??
சீனி - அதே நேரத்தில அதே காத்து அடிச்சு, கிளம்பும் தூசி உன் கண்ணில் பட்டு கண்ணை மறைத்தால் அதுதான்டா துரதிர்ஷ்டம்...!!












Click it and Unblock the Notifications