அவரா சொன்னார் அப்படி...!
அந்த வேலைக்காரப் பெண் ரொம்ப நாளாக அந்த எஜமானியம்மா வீட்டில் வேலை பார்த்து வருகிறாள். எஜமானியம்மாளோ செம கஞ்சம். பார்த்து பார்த்துதான் சம்பளம் கொடுப்பாள். இதனால் கடுப்பாகிப் போன வேலைக்காரி, இதெல்லம் வேலைக்காகாது, பேசாம கேட்டுட வேண்டியதுதான் என்று முடிவு செய்த, அம்மா, இந்த மாசத்திலிருந்து எனக்கு சம்பளத்தை ஏத்துங்க என்று கூறி விட்டாள்.
எதுக்குடி திடீர்னு சம்பளத்தைக் கூட கேக்குற என்று எஜமானியம்மாள் எகிற, காரணம் இருக்கும்மா, அதனால்தான் கேட்கிறேன் என்றாள் வேலைக்காரப் பெண். அது என்ன காரணம் சொல்லேன் என்று எஜமானியம்மாள் கேட்க காரணத்தை அடுக்கினாள் வேலைக்காரப் பெண்.
வேலைக்காரப் பெண் - நான் உங்களை விட சூப்பரா 'அயர்ன்' செய்றேன்ல, அதுக்காகத்தான்.
எஜமானி - யார் சொன்னது என்னை விட நீ நன்றாக அயர்ன் செய்கிறாய் என்று?
வேலைக்காரப் பெண்- 'அவர்'தான்!.
எஜமானி - (அதிர்ச்சி அடைந்தபடி) என்னது அவரா, அவரா சொன்னார் அப்படி?
வேலைக்காரப் பெண் - ஆமாம்மா அவர்தான் சொன்னார். அடுத்து, நான் உங்களை விட நன்றாக சமைக்கிறேனாம்.
எஜமானி- எந்த முட்டாள் சொன்னது அப்படி?
வேலைக்காரப் பெண் - வேற யாரு, அவர்தான்.
எஜமானி - அவரா???
வேலைக்காரப் பெண்- அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், உங்களை விட படுக்கையில் நான்தான் நன்றாக சுகம் தருகிறேனாம். அதனாலதான் கூடுதலா சம்பளம் கேட்கிறேன்மா என்றாள் வேலைக்காரப் பெண் அமைதியாக.
இதைக் கேட்டதும் கொதிப்படைந்து, பற்களை நறநறவென்று கடித்தபடி இப்படியா சொன்னார் எனது கணவர், அதுவும் உன்னிடம் போயா இப்படிச் சொன்னார் என்று கேட்டார்.
அதைக் கேட்ட வேலைக்காரப் பெண் எந்தப் பதட்டமும் இல்லாமல், அவர் இல்லைம்மா, நம்ம வீட்டுத் தோட்டக்காரன்தான் இதையெல்லாம் சொன்னான் என்று கூறி நிறுத்த.. ...
எஜமானி -உனக்கு எவ்வளவு சம்பள உயர்வு வேண்டும். அதை மட்டும் சொல் ப்ளீஸ்...!!












Click it and Unblock the Notifications