மறுபடியும் முயற்சிக்கலாம் யங் மேன்...!
ஒரு அழகான இளம்பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை உணர்ந்தாள். பயந்தாளா? அதுதான் கிடையாது, மாடர்ன் பொண்ணாச்சே, அம்மாவிடம் போய்ச் சொன்னாள்.
அம்மாதான் டென்ஷனாகி விட்டார், அடிப்பாவி என்று ஆரம்பித்து, உன்னுடன் பழகும் எந்தப் பன்றி இந்தக் காரியத்தைச் செய்தது என்று முடித்தார்.
அந்த அப்பாவிப் பெண்ணோ, இரு, நானும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அமைதியாகச் சொல்லி விட்டு தன் கைபேசியை எடுத்து யாருடனோ பேசினாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வீட்டு வாசலில், மிகவும் விலை உயர்ந்த சிவப்பு வண்ண பெராரி கார் வந்து நின்றது. அசத்தலான தோற்றத்துடன் ஒரு இளைஞன் வண்டியை விட்டு இறங்கினான். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தான். ஊரையே தூக்கும் அளவிற்கு நறுமணம் அவனுடன் சேர்ந்து வந்தது. வீட்டிற்குள்ளே பவ்வியமாக வந்தான்.
வந்தவன், அந்தப் பெண்ணின் தாய், தந்தை, மற்றும் அவளுடன், வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்தான். சற்றும் யோசிக்காமல், கவலைப்படாமல், பேசலானான்.
"உங்கள் பெண் சற்றுமுன் என்னிடன் தன்னுடைய புதுப் பிரச்சினையைச் சொன்னாள். நான் என்னுடைய சில சொந்த மற்றும் குடும்பப் பிரச்சினை களால், அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனாலும்
நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.
"பெண் குழந்தைபிறந்தால், அடையாறில் ஒரு பங்களா, அண்ணா சாலையில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி வைப்புத்தொகை தருகிறேன்."
"ஆண் குழந்தை பிறந்தால், வாரிசுச் சிக்கல் வரக்கூடாது. சென்னைப் புறநகரில் எங்களுக்கு உள்ள தொழிற்சாலைகளில் இரண்டை எழுதித் தருகிறேன். இரண்டு கோடி ரூபாய் வங்கி வைப்புத்தொகையாகத் தருகிறேன்"
"இரட்டைக் குழந்தைகள் என்றால், சொன்னதையெல்லாம் டபுளா தர்றேன். ஆனால், ஒரு வேளை, இடையில் கர்ப்பச் சிதைவு ஏற்பட்டாலோ அல்லது குழந்தை பிறப்பு சிக்கலாகி, குழந்தை உயிருடன் பிறக்காவிட்டாலோ, நான் என்ன செய்யட்டும்... நீங்களே சொல்லுங்க என்றான்.
அதுவரை அமைதியாக இருந்த பெண்ணின் அப்பா, எழுந்து நின்று, அவனுடைய தோளில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சொன்னார்: "You can try again!!!"












Click it and Unblock the Notifications