கன்னம் கனரா வங்கி.. கண்களோ கரூர் வைஸ்யா.. பல்லோ பஞ்சாப் நேஷனல்.. வாட்சப் அலப்பறை!
வங்கிகளில் பணம் எடுக்கக் காத்திருக்கும் ஒருவர் பாடியதாக கூறி ஒரு கவிதை வாட்சப்பில் உலா வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்டப் பகலில் பாங்க் வாசலில் பணத்துக்காக ஒரு வாரம் காத்துக் கிடந்த வாலிபனுக்கு சிந்தனையில் உதித்த கவிதை. வாட்சப்பில் வலம் வரும் இந்த கலகல கவிதையை நீங்களும் படிச்சுப் பாருங்க...
அவள் கன்னம் கனரா வங்கி..
கண்களோ கரூர் வைஸ்யா..
பற்களில் அவள் பஞ்சாப் நேஷனல்
இடுப்போ இந்தியன் ஓவர்சீஸ்..
நகங்கள் நபார்டு வங்கி..
இதழ்கள் இந்தியன் வங்கி..
மெல்லிடையோ மெர்க்கன்டைல்...
அவள் முத்து சிரிப்போ முத்ரா வங்கி..
பார்வையிலவள் பாரத வங்கி
தேகமோ தேனா வங்கி..
மொத்தத்தில் சில்லறைக்காக என்னை வரிசையில் நிற்க வைத்த ஜெட்லி அவள்..!












Click it and Unblock the Notifications