குழந்தை நீதி கதைகள்: ஹே குருவி சிட்டு குருவி- வாயினால் நொந்த குருவி
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ் , ஒரு குட்டி கதையை உங்க கிட்ட சொல்ல போக வேகத்துலையே திரும்ப வந்துருக்கேன். அளவிலும் கம்மி, அறிவிலும் கம்மியா இருக்கிற ஒரு குருவிய பத்தி சொல்றேன். கேக்கறீங்களா? சீக்கரம் வாங்க.
ஒருவழியா கோடைகாலத்தின் இறுதிக்கட்டம் அது. பெரிய ஆலமரத்துல ஒரு ஜோடி சிட்டுகுருவிகள் வசித்து வந்தன. இரண்டும் மழைக்காலம் வரதுக்கு முன்னாடி உறுதியான கூட்டைக்கட்ட எண்ணின. நன்கு வேலைசெய்யும் குணமுடைய இரண்டும் சீக்கரம் தாங்கள் நினைத்த படி அழகிய வீடு கட்டி மகிழ்ச்சியாக இருந்தன.
ஒருநாள் மிகவும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போ இவங்க கூடு இருக்கிற மரத்துக்கு கீழ ஒரு குரங்கு வந்து ஒதுங்கியது. மழைல ரொம்ப நனஞ்சுருச்சு, மேலும் அந்த குரங்கு குளிர்ல நடுங்கி கொண்டிருந்தது. அந்த குரங்கை பார்த்து பெண் குருவி,

"ஐயா ஏன் இப்படி மழையில் நனையறீங்க. உங்க வீட்டுக்கு போகலையா?னு கேட்டுச்சு.
அதற்கு அந்த குரங்கு சொல்லுச்சு, "எனக்கு தனியா வீடு எல்லாம் இல்லம்மா. நான் மரத்துக்கு மரம் மாறி மாறி தங்குவேன். இதை கேட்ட அந்த பெண் குருவி, "இந்த குரங்குக்கு மூளை இல்லையா? எதிர்காலத்திற்கு சேகரிக்காத சோம்பேறி குரங்கு போலனு. விமர்ச்சித்தது. கோபப்பட்ட அந்த குரங்கு, "குருவியம்மா கொஞ்சம் அமைதியா இரு. குரங்குகள் எதுவும் வீடு கட்டுவதில்லை. நாங்க மரத்தில்தான் தங்குவோம்னு" சொல்லுச்சு.
அமைதியாகாத குருவி மேலும், "நாங்க பாருங்க. எங்களோட சிறு அலகை வெச்சு, இந்த மாறி அழகிய கூடு கட்டிருக்கிறோம். ஆனால் உன்னிடம் இரண்டு கைகள் இருந்தும் உங்களால ஒரு சின்ன வீடு கூட கட்ட முடியாதா? என்று கூறி சிரித்தது. குரங்குக்கு கோபம் அதிகமானது.
குரங்கு கோபமாவதை பார்த்த ஆண் குருவி பெண் குருவியிடம் ," அமைதியாக இரு , அவரை ஏளனம் செய்வதால் நமக்கு எந்த நல்லதும் நடக்காது, அவரவர்களுக்கு இருக்கும் வாழ்க்கையை வாழ விடுவதே சிறந்தது" என்றது. இதை காதிலே போட்டுக்கொள்ளாத அந்த பெண் குருவி சிரிப்பதை நிறுத்தவில்லை
"ஏய் குருவி ஒரு வாட்டி சொன்னா புரியாதா? சிரிக்கிறதை நிறுத்துனு கத்தியது. குரங்கு கத்திய பிறகும், பெண் குருவியோ விட்டபாடில்லை. சிரித்துகொண்டே இருந்தது.

கோபம் தலைக்கேறிய குரங்கு தன்னோட இரண்டு கைகளை கொண்டு அந்த குருவின் கூட்டை கிழித்து எரிந்தது. அந்த குருவிக்கு இப்பொது கோபம் வந்தது. ஆனால் என்ன செய்ய முடியும். சிரிச்ச அளவுக்கு அழுதுட்டு மழையில் நனைந்தபடி இருந்தது. தேவையில்லாத பேச்சினால் தனக்கு தான் நஷ்டம்னு மனசுல நெனச்சு வருந்தியது.
குட்டி கதை எப்படி இருந்தது குட்டிஸ். நம்மளோட வாயை அளவாக பயன்படுத்தினால் நம்ம வாழ்க்கையும் வளமாக இருக்கும். இல்லன்னா வாயே நமக்கு வினையாகும். சில நேரங்களில் நாம் அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடாமல், நமக்கு கிடைத்த வாழ்க்கையை அழகாக செதுக்கிவிடலாம். ஆக குழந்தைகளே சிந்தித்து சிறப்பாக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் எவ்விடத்தும் நாவடக்கம் வேண்டும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications