குழந்தை நீதி கதைகள்: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.. பெற்றோர் பேச்சை கேட்கனும் குட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், துஷ்டனை கண்டால் தூர விலகு இது பழமொழி. நம்மை சுற்றி சில விரோதிகள் இருந்தால் நாம் அவர்களை விட்டு சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.

இப்ப ஸ்கூல்ல உங்ககிட்ட யாராவது பிரச்சனை பண்றாங்கன்னு வச்சிக்கலாம். நீங்க அப்ப என்ன பண்ணுவீங்க? நீங்களும் பதிலுக்கு சண்டை போடணும்னு இல்ல. உங்க மிஸ் கிட்ட சொல்லி அத சரி பண்ணிக்கலாம்.

Short story for kids in Tamil : The tale of Wolf and the Lamb

இதை தெளிவா உங்களுக்கு புரியிற மாதிரி குட்டி ஸ்டோரி சொல்றேன். ஒரு காட்டுக்குள்ள சுட்டித்தனமான ஆட்டுக்குட்டி ஒன்று இருந்தது. அந்த ஆட்டுக்குட்டி எப்பவும் அவங்க அம்மா சொல்றத கேட்காது. அதுபாட்டுக்கு ஜாலியா சுற்றி வந்தது. அம்மா அங்க போகாத குட்டி அப்படின்னு சொன்னா சுட்டித்தனமா அங்கதான் போகும்.

ஒருநாள் ஆட்டுக்குட்டி இப்படி விளையாடி கொண்டே இருந்திச்சு , அப்போ திடீர்னு பக்கத்துல இருந்த சேற்றுக்குள்ள தவறி விழுந்திருச்சு. அது நல்லா இருக்கவும் அதுலயும் விளையாட ஆரம்பிச்சிடுச்சு. அவ்ளோதான் இத அவங்க அம்மா ஆடு பாக்க, ஆட்டுக்குட்டிக்கு பயம் வந்திடுச்சு. ஆனா அவங்க அம்மா ஆடு கோவப்படாம நிதானமா குட்டிய கூப்பிட ஆரம்பிச்சிது.

ஆட்டுக்குட்டி அம்மா அம்மா இது ரொம்ப சூப்பரா இருக்குமான்னு மறுபடியும் விளையாட ஆரம்பிச்சுது. அம்மா ஆடு, 'வாடா தங்கம் அம்மா உன்ன சுத்தம் செய்றேன்' னு கூப்பிட அதுவும் அம்மா சாரி மா னு சொல்லிட்டு வெளிய வந்துச்சு . அவங்க அம்மா ஆடும் பக்கத்துல இருக்க அருவிக்கு கூட்டிட்டு போக ஆரம்பிச்சது.

அவங்க ஜாலியா பேசிக்கிட்டே அருவியை பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க. அப்போ அவங்க அம்மா சொன்னாங்க, 'தனியா இந்த அருவிக்கு நீ எப்போவும் வரக்கூடாது தங்கம், நிறைய காட்டு மிருகங்கள் இந்த அருவிக்குதான் தண்ணி குடிக்க வரும். அதனால நீ தனியா வந்தா அவங்க பசிக்கு நீ இறையாகிடுவ' னு சொலிட்டே அருவிக்கும் வந்துட்டாங்க. அருவில குளிச்சு ஆட்டுக்குட்டிய சுத்தம் பண்ணிட்டு வீட்டுக்கும் போய்ட்டாங்க.

மறுபடியும் ஆட்டுக்குட்டி அதோட சுட்டித்தனமான விளையாட்டால் அந்த சேற்றுக்குள் விழுந்திருச்சு. இந்த முறை அம்மாக்கு தெரியாம நாமே சுத்தம் செய்யுதுக்கலாம்னு காட்டு அருவிக்கு குட்டிஆடு போக ஆரம்பிச்சது . அப்போ பாத்து ஓநாய் ஒன்னு அங்க தண்ணி குடிக்க வந்துருக்கு .

ஆட்டுகுட்டிய பாத்த ஓநாய் இன்னைக்கு சரியான வேட்டைனு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டே ஆட்டுக்குட்டி கிட்ட, 'நீதானா என்ன பத்தி ஒரு வருஷம் முன்னாடி காட்டுக்குள்ள புரளி பரப்பினது'னு கேக்க ஆரம்பிச்சது. ஆட்டுக்குட்டிக்கு புரிய ஆரம்பிச்சது நாம தனியா மாட்டிகிட்டோம். எப்படியாவது தப்பிக்கணும்னு யோசிக்க ஆரம்பிச்சது. அப்போ அங்கு சில வேட்டைக்கு போகும் மனிதர்கள் பேசுற சத்தம் கேக்க ஆரம்பிச்சது.

நிலையை புரிந்து கொண்ட ஆட்டுக்குட்டி ஓநாயிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தது. 'அது நான் இல்ல ஓநாய் அண்ணா நான் பொறந்து சில மாதங்களே ஆகுது என்னால எப்படி உங்கள பத்தி பேச முடியும்'. ஓநாயும் விடுவதாக இல்ல ,'நீ செய்த பிழைக்கு நீதான் என் உணவுனு முடிவு பண்ணிட்டேன்' னு சொல்லிச்சு. வேட்டைக்கு வந்தவர்கள் சத்தம் அருகில் கேட்கவே ஆட்டுக்குட்டி நான் இல்லனு சொல்ல ஆரம்பிச்சது.

இதை பார்த்த வேட்டையர்கள் ஓநாயை அடித்து விரட்டி அனுப்பிவிட்டார்கள். ஆட்டுக்குட்டியும் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றது.

ஆமாம் குட்டீஸ் பெற்றவர்கள் சொல் கேட்கணும். நீங்க பிரச்சனைல மாட்டிக்கிட்டா சமயோஜிதமாக யோசிச்சு அதுல இருந்து விடுபடனும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+