பங்குனிக்கே பதறுனா எப்புடி.. சித்திரைக்கு பிறகுதான கொளுந்து விட்டே எரியப் போறேன்!
சென்னை: 'பங்குனி வெயிலுக்கே இப்படி பதறினால் எப்படி?' என சித்திரை வெயிலை வைத்து இப்போதே மீம்ஸ் போடத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் வெயில் எப்படி இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த கதைதான். ஆனாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம், மே மாதத்தை குறிப்பாக அக்னி நட்சத்திரத்தை நினைத்து கொஞ்சம் கூடுதலாகவே அச்சப்படத்தான் வைக்கிறது. காலை, மாலை, இரவு என பாகுபாடில்லாமல் எல்லா நேரத்திலும் வெயிலின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

வீட்டில் இருப்பவர்களுக்குக்கூட பரவாயில்லை. வெயிலில் வெளியில் வேலைக்கு சென்றேயாக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், முன்பெல்லாம் சாலையின் ஓரத்தில் மரங்கள் இருந்தால் கொஞ்சம் குளுகுளுவென இருக்குமே என எதிர்பார்ப்பார்கள். இப்போது கட்டிடங்கள் கிளை விரித்து, முளைத்து விட்ட சாலைகளில் மரங்கள் கண்ணுக்கு தட்டுப்படுவதே அரிதாகி விட்டதால், சாலைகளிலும் யாராவது ஃபேன் மாட்டினால் நன்றாக இருக்குமே என எண்ணத் தொடங்கி விட்டனர்.
ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், சாலைகளில் அரசு விளக்கு மாட்டியிருப்பதுபோல், ஏசியையும் மாட்டினால் நன்றாக இருக்குமே என மீம்ஸ்கள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படியாக சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே வெயிலின் கொடுமைகளைத்தான் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications