‘ரெண்டு போட் வாங்கி வாடகைக்கு விட்டா’.. அட என்னங்க செப்டம்பர்லயே இப்டி யோசிக்க வச்சிடுச்சே இந்த மழை!
சென்னை : தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் எல்லாம் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னையில் நேற்று மாலை முதலே மழை பெய்து, குளுகுளுவென வானிலை நீடித்து வருவதை வைத்து, இணையத்திலும் குளுகுளு மழை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இது செப்டம்பர் மாதமா இல்லை மே மாதம் மப்டியில் வந்திருக்கிறதா எனச் சந்தேகப்படும் அளவிற்கு கடந்த வாரம் வரையில் சென்னையில் மற்ற மாவட்டங்களைப் போல் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், வாரணம் ஆயிரம் பாடல் போல், கடந்த சில நாட்களுக்கு முன் சட்டென மாறியது வானிலை. வாட்டி வதைத்த வெயிலுக்கெல்லாம் சேர்த்து வைத்தார்போல், மழைக் கொட்டித் தீர்த்து விட்டது. அப்போது மாறிய வானிலை இன்று வரை தொடர்ந்து வருகிறது.

மற்ற மாவட்டங்கள் எல்லாம் வழக்கம் போல் வெயிலால் தகித்து வர, சென்னை மட்டும் குளுகுளுவென ஊட்டி போல் மாறி விட்டது. பிறகென்ன, 'டேய் உன் பேரு இனி செப்டம்பர் இல்லை.. மேடம்பர்' என வெயிலை வைத்து மற்ற மாவட்டத்தினர் மீம்ஸ் போட்டுப் புலம்பிக் கொண்டிருக்க, சென்னை மக்களோ மழையால் சாலையில் தண்ணீர் தேங்குவதை வைத்து புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட வெயில் மற்றும் மழை பற்றிய ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications