தீபா திடீருன்னு பொட்டு வச்சிருப்பதை கவனிச்சீங்களா?
ஜெயலலிதாவின் நினைவிடத்தில், நேற்று தீபா திடீரென தியானம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் வட்டவடிவில் பொட்டு இருந்தது. இந்த திடீர் மாற்றம் ஏன் ஏற்பட்டது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா, ஒரு கிறிஸ்தவரை திருமணம் முடித்துள்ளார். இதுகுறித்து பொது வெளியில் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்து மத நம்பிக்கைகளில் தீவிரமாக இருந்த ஜெயலலிதா, இதனால்தான் அவரது அண்ணன் மகளை ஒதுக்கியே வைத்திருந்திருப்பார் என்ற யூகங்களும் சமூக வெளிகளில் பரவி வருகின்றன.
இந்நிலையில்தான், தீபாவும் தனது கிறிஸ்தவ மத கொள்கைப்படியே நெற்றியில் பொட்டு வைக்காமல் காணப்பட்டதாக கூறப்பட்டது. தினமும் துளசி பூஜை நடைபெற்ற போயஸ் இல்லத்தில், தீபா குடியேற, உரிமை கொண்டாடுவது ஏற்புடையதல்ல என்ற வாதம் சசிகலா ஆதரவு அதிமுகவினரால் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான், ஜெயலலிதாவின் நினைவிடத்தில், நேற்று தீபா திடீரென தியானம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் வட்டவடிவில் பொட்டு இருந்தது. இந்த திடீர் மாற்றம் ஏன் ஏற்பட்டது. தமிழகத்தில் பெருவாரியாக உள்ள இந்து மக்களின் வாக்குகளை ஈர்க்க தீபா, பொட்டு வைத்து போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
மக்கள் ஏமாற மாட்டார்கள்
இந்த தீபா நேற்று மட்டும் எதனால் நெற்றியில் பெரிய பொட்டு வைத்து இருந்தார். RK நகர் மக்களை ஏமாற்றவா? இனியும் ஏமாந்துபோக மக்கள் தயாராக இல்லை
|
போஸ்டர்களில் ஏற்கனவே ஆரம்பம்
பொட்டு வைக்காம வளைய வரும் தீபா பேட்ரிக்கை போஸ்டர்களில் பொட்டு வைத்து ஜெய.தீபாவாக நிறுவ பார்க்கிறான் பதவி கிடைக்காத அதிமுக தொண்டன்!!
|
ஷர்மிளா கதிதான்
என்ன தீபா பேட்ரிக் இன்னைக்கு பொட்டு பெரிசா இருக்கு ஆர் கே நகர் தொகுதி இடை தேர்தல் இந்து பயமா.. மணிப்பூர் சர்மிளா நிலைமைதான்..
|
தீபா இப்போது
தீபா நவ்.. எனக்கூறி, சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் மனோரமா கதாப்பாத்திரம் நடித்த காட்சியை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பொட்டு ஏன் பெருசாச்சு
வாக்குக்காக எதுவும் செய்வோம், இதென்ன ஜுஜுபி!












Click it and Unblock the Notifications