உக்காருங்க தெளிவா பேசுவோம்.. "தெளிய வச்சு" அடிக்கும் பரோட்டா மாஸ்டர்!!
சென்னை: இது மீம்ஸ் காலம். டிரோல் செய்யாவிட்டால் ஒரு மாதிரி டல்லடிக்க ஆரம்பித்து விடுகிறது. அதற்கேற்றவாறு பிரச்சினைகளும் வந்தபடிதான் உள்ளன.
அந்த வகையில் பரோட்டாமாஸ்டர் என்ற பேஸ்புக் பக்கத்தில் சமஸ்கிருதம், இந்தி கற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு கூறி வருவதை கலாய்த்து கலகலப்பாக சில மீம்ஸ்களைப் போட்டுள்ளனர்.
ஒரு படக் காமெடியை வைத்து இந்த இந்தி கலாய்ப்பை அரங்கேற்றியுள்ளார் இந்த பரோட்டா மாஸ்டர். அது இதுதான்...!
உட்காருங்க தெளிவா பேசுவோம்
வடிவேலுதான் மத்திய அரசு. சத்தியராஜ்தான் தமிழர்கள். மத்திய அரசு இந்தி கற்றுக் கொள்ளச் சொல்கிறது. அதற்கு தமிழர்களின் கருத்தைப் பாருங்க.
ஏன் கத்துக்கனும்?
இது நியாயமான கேள்விதான். வேலையும் கிடைக்கும். தோசையும் கூடவே பிரச்சினையில்லாம சாப்பிடலாம்ல!
படிச்ச பக்கிகள்
வட இந்தியாவுக்குப் போகும் தமிழர்கள் எல்லாமே "படித்த பக்கிகள்தானே".. இதுவும் நியாயம்தான்.
இங்கிலீசு பத்தாதா?
படித்தவர்களுக்கு இங்கிலீஷ் போதாதா.. அதை வைத்து சமாளிக்க முடியாதா?
ஆமா நீங்க எதுக்கு வர்றீங்க?
ஆனால் இந்திக்காரவுங்க எதுக்கு இங்க வர்றாங்க.. கூலி வேலைக்குத்தான் பெரும்பாலும். அட நம்ம ஊர் பரோட்டா கடையில் கூட பரோட்டா மாஸ்டர் இந்தி பேசுபவரா இருக்காரே!
இந்திய வச்சு சமாளிக்க முடியுமா?
கூலி வேலை பாக்குறவங்க தமிழ்நாட்டுல எப்படி இந்திய வச்சு சமாளிக்க முடியும்...!
எப்ப தமிழ் கத்துக் கொடுக்கப் போறீங்க பாஸ்!
அப்டீன்னா அவங்களுக்கு எப்ப நீங்க தமிழ் கத்துக் கொடுக்கப் போறீங்க..!
என்னத்த பேச!
என்னத்த பேச!