கைல காசு இருந்தா மட்டன் பிரியாணி.. இல்லாட்டி ரெண்டு டீயும், வடையும்.. இவ்வளவுதான்ங்க வாழ்க்கை!
ஞாயிறு ஸ்பெஷலாக சமூகவலைதளங்களில் பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை கறி சமைத்துச் சாப்பிடலாம் என ஆசையாய் இருந்தவர்கள் வயிற்றில் சாம்பாரை ஊற்றி விட்டது தைப்பூசம். சாப்பிட்ட சாம்பார் ஜீரணமாக முடிந்தளவுக்கு ஞாயிற்றுக்கிழமையை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற நாட்களில் எல்லாம் காலையில் எழ மனதே வராது. ஆனால், ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டும் என்ன அப்படி ஒரு பவரோ தெரியாது.. நன்றாக தூங்கி 10 மணிக்குத்தான் எழுந்திரிக்க வேண்டும் என நாம் எவ்வளவுதான் நினைத்தாலும், 6 மணிக்கு டான் என விழிப்பு வந்து விடும். அதுவும், மற்ற நாட்களில் எல்லாம் இல்லாத புத்துணர்ச்சி அன்றுதான் நிறையவே இருக்கும்.
புரட்டாசி மாசம்.. அமாவாசை.. ஞாயிற்றுக்கிழமை சாம்பார் சாப்டுற அந்த வேதனை இருக்கே சார் வேதனை!
பிறகென்ன, 'நமக்கு எதிரி வெளில இல்ல.. உள்ளுக்குள்ள தான் இருக்கான்..' என நம்மை நாமே திட்டிக் கொண்டு வேறு வழியே இல்லாமல் எழுந்திருக்க வேண்டியதாகி விடும். இப்படியாக ஞாயிறு பொழுதுகளைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும்.
அதுவும் இந்த வாரம் தைப்பூசம், ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட, விதவிதமாக அசைவ உணவு சாப்பிடலாம் எனக் காத்திருந்த வாய்களுக்கு எல்லாம் சாம்பார்தான் கிடைத்தது. இது போதாதா? வழக்கம் போலவே ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிரத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக இணையத்தில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...